Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Saturday, 28 May 2022

Himam Pasand Mango

 @Sadhana Organic Nature Gardens . We are in the thick of the Mango season. But, there are hardly any fruits this year. A disastrous Mango season in Tamilnadu. So, each fruit that has survived is a precious one. Sadhana is harvesting one such precious Himam Pasand Mango today. A perfect specimen. Mature, flawless, rare. Mother Nature's Blessing

Saturday, 14 October 2017

CASUARINA

Introduction

SpeciesCasuraina equisetifolia
FamilyCasuarinaceae
Local Name
TamilSavukku
TeluguSaragudu
Kannada Sarve
Marathi Saru
OriyaJhabuke
Trade NameBeef wood
Image courtesy : Wikipedia

Origin

Casuarina is an exotic to mainland India. It was introduced in Karwar District in 1668.It occurs naturally in the Andaman’s, Bangladesh and Burma coast. Natural regeneration of the species is rarely seen and it has to be raised by planting only.

Description

Casuarina is a large fast growing evergreen tree with graceful appearance, resembles a feathery conifer. Bole  is  long and cylindrical.  In rare cases and in the interiors, there are instances of developing thick branches.  In  it is natural state it is gregarious, forming pure crops with little or no under growth except grass and sporadic shrubs.

The tree attains height up to 40 m with diameter of 60 cm (180 cm girth) often, buttressed at the base. It is  short lived;  its natural span of  life seldom exceeds 50 years. In less favorable localities, it turns misshapen and hollow beyond 25 years of age. The tree flowers generally twice a year during February–April and September– October.  Fruits (Cones) appear in June and December.  Variations in flowering and fruiting  may occur with localities.

Environmental Requirements

Temperature: Along the coastal regions, where Casuarina thrives, the temperature is extreme sometimes extending to 470C. Under inland conditions it tolerated extreme temperatures, but its growth is poor.

Rainfall: It grows well in both Southwest and North East monsoons. In peninsular India, the rainfall
is in between 900 to 3800 mm. Growth is poor in low rainfall areas.

Soil: Casuarina grows best in loose, fine coastal sands.It can grow well under inland conditions of well drained  sandy soils. It tolerates lateritic and red soils and also saline, alkaline and acidic conditions. The trees have  nitrogen fixing root nodules and hence dependability on nitrogen supplement is less.

Silvicultural Requirement 

Casuarina is a fast growing, light demanding species. It is very sensitive to excess soil moisture, fire and frost. It does not tolerate water logging for long. It does not tolerate drought  up to sapling stage, later with deep rooting, it can withstand drought.  It tolerates low temperature and shade.  As a general rule it does  not  coppice  but  can  with  stand  pollarding. Rare instances of natural regeneration and root suckers are noticed.  It improves soil fertility by virtue of its vigorous root nodulation with nitrifying bacteria.

Yield

Every part of the tree is useful, including needles as fuel.  The best yield of about  125 to 150 tons per hectare is possible with in three years at an espacement of 4 X 4 feet or 5 X 5 feet.  It is also possible to increase the yield through quality planting material coupled with irrigation and fertilization.

Intercropping

Agricultural crops can be raised in the first year with Casuarina especially groundnut and melons in sandy soils, sesame in red soils and pulses in heavy soils. 

Utility

Pulp  wood:
Casuarina is a good pulpwood species. Farmers are cultivating mostly this species for pulpwood. Yield and strength  properties of Casuarina pulp are reported satisfactory for wrapping paper and duplex paper. It makes good pulp by  use of neutral sulfite semi chemical process. The material with bark is used for pulping.

Fuel wood:
Casuarina is considered to be the best firewood in the world, burns even  when  green. Its calorific value is 4950  Cal/Kg and hence, it can be a source of bioenergy.

Timber:
 The sapwood is pale brown, heartwood dark reddish brown.  Timber is strong and heavy (average 850 kg/m3). It is liable to crack and split, not easy to saw and season.  It is used as poles, scaffolding, transmission lines and
 rafters. 

Medicinal:
 Bark  of Casuarina is a tonic and astringent useful in dysentery and diarrhea. Decoction of leaves and twigs is  used  in  colic  and  powdered  seed  in made  into  a  paste  and  applied  as  balm  for  headaches.  Bark  contains  6-18% tannin,  which  is  also  used  for  dyeing  wool  and  silk  fabrics and  for  toughening fishermen nets.  It also yields a resin. Needles of Casuarina have been used for preparing activated carbon by the zinc chloride method.

Avenue:
Casuarina forms a good avenue tree and most suitable for landscaping sea beaches.   It forms a good hedge plant and can be shaped to desired form.

Windbreak:
Casuarina with deep taproot can withstand cyclonic storms than any other species and is very useful as a windbreak and for sand dune stabilization.

Soil Improvement:
Casuarina develops  nitrogen  fixing  nodules  of  Frankia  species  on  the roots.  They fix considerable quantities of nitrogen in the soil and help to improve the soil nutrient status.

For contract farming, the following addressee can be contacted;
1) The Head (Environment), Sheshasayee  Paper  Board,  Erode.  Mobile: 9443340236.
2) The Manager (Plantations), Tamil  Nadu  Newsprints and  Papers Ltd, Mobile: 9442591411.

For further information; please contact
The Dean,
Forest College and Research Institute,
Tamil Nadu Agricultural university,
Mettupalayam, Tamil Nadu– 641 301.
Ph: 04254 – 22010, 222398, 227418.
Mobile: 09443505844.
Email: deanformtp@tnau.ac.in
Website: tnau.ac.in

Info courtesy : TNAU

Thursday, 7 September 2017

உரமாகும் பார்த்தீனியம்

பார்த்தீனியம்

கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
Image courtesy : Wikipedia



மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும்.

இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே இயற்கை உரமாக மாற்றலாம்

“முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள (தேவைக்கேற்ப நீள அகலங்களை மாற்றிக் கொள்ளலாம்.) 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும். அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும்.

அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது.

இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.

தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் உள்ளிட்டவற்றை போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்”

பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும்.

பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்படும்.

சுகாதாரக் கேடு

பார்த்தீனியத்தில் உள்ள "செஸ்கிடெர்பின் லேக்டோன்' என்ற வேதிப் பொருளால் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அரிப்பு, தோல் வியாதி, கண் வீக்கம், ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்படும்.

விளை நிலங்களில் பாதிப்பு

பார்த்தீனியம் செடிகளின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் உள்ள "பினாலிக் அமிலம்' மற்ற செடிகளின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கும் வல்லமை கொண்டது. ஒரு செடியிலிருந்து 624 மில்லியன் மகரந்தத் தூள்கள் வெளிவந்து, காற்றில் பரவி இவை வளர்ச்சியடைவதுடன், மற்ற செடிகளின் பூக்களுக்குள் பரவி அவற்றின் காய்பிடிக்கும் தன்மையைப் பாதிக்கும். விளைநிலங்களில் இச் செடியின் வளர்ச்சியால் 50 சதவீதம்வரை மகசூல் இழப்பு நேரிடும்.

செடிகளை பிடுங்கி அழித்தல்

பார்த்தீனியத்தை இளந்தளிர் பருவத்திலேயே அகற்றி எரித்துவிட வேண்டும். இச்செடிகளைக் கையால் பிடுங்கி அழிக்கும்போது கண்டிப்பாக கையுறை, முக உறை அணிய வேண்டும். இதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்கலாம்.
சமுதாய நோக்குடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உதவியுடன் இச் செடிகளைப் பிடுங்கி எரிக்கலாம். மேலும், பூக்கும் பருவத்துக்கு முன்பும், மழைக்காலங்களிலும் அகற்றினால் இச்செடிகளின் பரவும் தன்மையைக் குறைக்கலாம்.
செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டு பார்த்தீனிய களையைக் கட்டுப்படுத்தலாம். அடர் அவரை, துத்திச் செடிகளை வளரச் செய்வதன் மூலமும், பார்த்தீனியம் அல்லாத காய்ந்த பிற செடிகளை நிலப்பரப்பில் பரப்பி வைப்பதன் மூலமும் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை

சைகோகிராமா பைகலரோடா என்ற மெக்சிகன் வண்டும், அவற்றின் புழுக்களும் பார்த்தீனியம் செடியின் இலைகள், பூக்களைத் தின்னும். எனவே, இந்த வண்டுகளை மழைக்காலங்களில் குறிப்பாக, ஜூன் முதல் பிப்ரவரி வரை பார்த்தீனியம் செடிகளில் இட வேண்டும்.

மண்புழு உரம் தயாரித்தல்

பூக்கும் முன்னர் பார்த்தீனியம் களைகளைச் சேகரித்து, அவற்றை 5-10 செமீ அளவில் நீளவாட்டில் நறுக்கி 10 செமீ சுற்றளவில் 10 செமீ உயரத்துக்கு கீழிருந்து 5 அடுக்குகளாக அடுக்கி, அதன் மேல் 10 சதம் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாள்கள் மக்குவதற்கு வைக்க வேண்டும். 45 முதல் 60 நாள்களில் மண்புழு உரம் கிடைக்கும்.

கம்போஸ்ட் தயாரித்தல்

இச்செடியை பூக்கும் முன்னர் ஒரு டன் அளவுக்கு சேகரித்து 7 செமீ முதல் 10 செமீ வரை சிறு துண்டுகளாக நறுக்கி, வடிகால் வசதி, நிழல் உள்ள உயரமான இடத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு 10 செமீ அடர்த்தியாக அடுக்குகளாக பரப்ப வேண்டும். இதன் மீது 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண மருந்து, 5 கிலோ யூரியாவைக் கரைத்து பரவலாக தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 50 முதல் 60 சதம்வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இது, 40 முதல் 45 நாள்களில் கம்போஸ்டாக கிடைக்கும். இது, பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி.



Monday, 28 August 2017

கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்

மாடுகளுக்கு…
அயலின கால்நடைப் பெருக்கப் பண்ணை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர். தொ.பே. 04372 – 244844 மாவட்ட கால்நடைப் பண்ணை, உதகமண்டலம், நீலகிரி. தொ.பே. 0423 – 2444064 மாவட்ட கால்நடைப் பண்ணை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் தொ.பே. 94450 32535
நாட்டுப் பசு வகைகளுக்கு…
கால்நடைப் பண்ணை, கொருக்கை, திருவாரூர் தொ.பே. 04369 - 295565
வெள்ளாடு, செம்மறி ஆடு வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை, செட்டிநாடு, சிவகங்கை மாவட்டம் தொ.பே. 04565 – 283275 ஆட்டுப் பண்ணை, சின்னசேலம் விழுப்புரம் மாவட்டம்,
தொ.பே. 04282 – 260041
ஆட்டுப் பண்ணை, முகுந்தராயபுரம் வேலூர் மாவட்டம், கைப்பேசி: 94450 – 32529

ஆட்டுப் பண்ணை, சாத்தூர், விருதுநகர் மாவட்டம்,
தொ.பே. 04562 – 292666
Image courtesy : Wikipedia
கோழி வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை, அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி தொ.பே. 0462 – 2338759 கோழிப் பண்ணை, காட்டுப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் தொ.பே. 044 – 27452371
பன்றி வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை, ஒசூர், கிருஷ்ணகிரி தொ.பே. 04344 – 262632 மாவட்ட கால்நடைப் பண்ணை, புதுக்கோட்டை, தொ.பே. 04322 – 270395

நன்றி தி இந்து

Friday, 24 March 2017

கூட்டம் பிரிதல்: தேனீ வளர்க்கலாம் பகுதி-IX

கூட்டம் பிரிதல்:
சாதகமான சூழ்நிலை நிலவும் காலங்களில் தேனீக்கள் பல்கிப் பெருகுகின்றன. இவ்வாறு பெருக்கம் அடைந்த கூட்டங்களில் இனவிருத்தியின் பொருட்டுக் கூட்டம் பிரிதல் அல்லது குடி பெயர்தல் நிகழ்கின்றது. 

கூட்டம் பிரியும் தாபம் தேனீக்களிடம் காணப்படும் ஓர் இயற்கையான உணர்வு ஆகும். இந்தியத் தேனீ இனங்களில் இவ்வுணர்வு கூடுதலாகக் காணப்படுகின்றது. மதுர வரத்து கூடும் காலங்களில் இவ்வுணர்வு கூடுகின்றது. கூட்டம் பிரியும் உணர்வு கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபடும். கூட்டம் பிரியும் காலம் மதுர வரத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் வேறுபடும். இந்த உணர்வு தேனீக்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றது. கூட்டம் பிரிதலால் தேனீக்கள் உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களை நாடிச் செல்லுகின்றன. இதனால் தேனீ இனம் உணவின்றி அழிவது தவிர்க்கப்படுகின்றது.

நடைபெறக் காரணங்கள்:
  • ஒரு சில கூட்டங்களில் பாரம்பரிய ரீதியாகக் கூடுதலாகக் காணப்படும் பிரிந்து செல்லும் உணர்வு
  • அதிக மதுர வரத்தால் விரைந்து நடைபெறும் கூட்ட வளர்ச்சி
  • வயதான ராணித் தேனீயால் போதிய அளவு ஈர்ப்புச் சுரப்பைச் சுரக்க இயலாத சூழ்நிலை
  • வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை வயல் வெளித் தேனீக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருத்தல்
  • புழு வளர்ப்பு மற்றும் தேன் சேமிப்பிற்குப் போமிய இட வசதியின்மை
  • கூட்டின் வெப்ப நிலை கூடுதல்
  • கூட்டில் போதிய காற்றோட்ட வசதியின்மையால் ஏற்படும் புழுக்கம்
  • தேனீப் பெருக்கத்தாலும் தேன் சேமிப்பாலும் தோன்றும் இட நெருக்கடி
  • சேமித்து வைத்துள்ள தேனை அவ்வப்பொழுது எடுக்காது இருத்தல்
ஏன் தடுக்க வேண்டும்?
தேனீ வளர்ப்போர் தேனீக் கூட்டம் பிரித்து செல்வதை அவசியம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் அடிக்கடி கூட்டம் பிரிய நேரிட்டால்
  • கூட்டத்தின் வலு குறையும்
  • தேன் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்
  • அடைப் பரப்பில் போதிய பணித் தேனீக்கள் இல்லாத நிலையில் வளரும் புழுக்கள் போதிய கவனிப்பும் சூடும் இன்றி இறக்க நேரிடும்
  • புழு வளர்ப்பு தற்காலிகமாகத் தடைப்படும்
  • பணித் தேனீக்களின் உணவு திரட்டும் ஆர்வம் குறையும்
  • சில நேரங்களில் ராணித் தேனீ இழப்பு நேரிட்டு, பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்கும். இதனை உரிய நேரத்தில் தடுக்காவிட்டால் கூட்டமே படிப்படியாக அழிய நேரிடும்
அறிகுறிகள்:
  • பெட்டியில் தேனீக்கள் பொங்கி வழியும்
  • ஆண் தேனீ அறைகள் அதிக எண்ணிக்கையில் அடையில் கட்டப்படும்
  • புதிய ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் அதிக எண்ணிக்கையில் கட்டப்படும்
நடைபெறும் விதம்:
  • மதுர வரத்து கூடும் பொழுது கூட்டம் பிரியும் உணர்வு தூண்டப்படுகின்றது. இத்தருணத்தில் ராணித் தேனீயின் தினசரி முட்டையிடும் திறன் கூடுகின்றது. புழு வளர்ப்பும் துரிதமாக நடைபெறுகின்றது. இதனால் வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை கூடுகின்றது. மேலும் பெட்டியில் இடநெருக்கடி ஏற்படுகின்றது.
  • தாதித் தேனீக்களில் அரசக் கூழ் அதிக அளவு சுரக்கின்றது. இவ்வாறு சுரக்கும் அரசுக் கூழினை வெளியேற்றிப் பயன்படுத்துவதற்காகப் புதிய ராணித் தேனீ அறைகள் கட்டப்படுகின்றன. பணித் தேனீக்கள் இரண்டு நாள் இடைவெளியில் பல ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைப் புழு அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் கட்டுகின்றன.
  • ராணித் தேனீ அறைகளைக் கட்டும் முன்னர் ஆண் தேனீ அறைகள் அடையின் பல பகுதிகளிலும் தேனீக்களால் கட்டப்படுகின்றன. புதிதாக வரவிருக்கும் ராணித் தேனியுடன் புணர்ந்து கருவுறச் செய்வதற்காக ஆண் தேனீக்களை இவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகின்றன
  • ராணித் தேனீக்கு தரப்படும் உணவின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் ராணித் தேனீயின் வயிறு மெலிந்து பறக்கும் சக்தியைப் பெறுகின்றது
  • ராணித் தேனீ அறைகள் மெழுகு மூடியினால் மூடப்பட்டவுடன்  பழைய ராணித் தேனீ, பாதிக்கும் மேற்பட்ட பணித் தேனீக்களுடன் கூட்டைவிட்டு ஒரு கூட்டமாகப் பறந்து செல்கின்றது
  • கூட்டை விட்டு பிரிந்து செல்லும் முதல் கூட்டம் முதன்மைக் கூட்டம் எனப்படும். பொதுவாகக் காலை நேரத்தில் பிரகாசமான சூரிய ஒளி இருக்கும் பொழுது கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. கூட்டம் பிரிவதற்கு சற்று முன் சில பணித் தேனீக்கள் நுழைவு வழியின் முன் பரபரப்புடன் பறந்து கொண்டு இருக்கும். இவை ஒரு வித ரீங்கார ஒலியை ஏற்படுத்தும் நேரம் ஆக ஆக அதிக எண்ணிக்கையில் பணித் தேனீக்கள் கூட்டை விட்டு வெளியேறும். இவ்வாறு வெளியேறும் பணித் தேனீக்கள் தேனைக் குடித்து விட்டு வரும். பணித் தேனீக்களுடன் சேர்த்து ராணித் தேனீயும் கூட்டை விட்டு வெளியேறும். பின்னர் பிரிந்த கூட்டம் முதலில் அருகில் இருக்கும். ஏதாவது ஒரு மரக் கிளையில் ஓரிரு நாட்கள் புதிய கூட்டை அமைப்பதற்கான இடம் செரிவு செய்யப்படும் வரை ஒரு திரளாகத் தங்கும்.
  • முதன்மைக் கூட்டம் வெளியேறிய ஒரு வாரத்திற்குள் வெளிவரும் புதிய ராணித் தேனீ பிற ராணித் தேனீ அறைகளைக் கடித்து சேதப்படுத்தும் அல்லது எஞ்சியுள்ள பணித் தேனீக்களின் ஒரு பகுதியுடன் வெளியேறும். இவ்வாறு கூட்டத்தின் வலுவைப்பொறுத்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின் கூட்டங்கள் வெளியேறும்
தடுக்கும் முறைகள்:
  • கூட்டம் பிரிதலை முற்றிலுமாகத் தடுக்க இயலாது. ஆனால் தேனீ வளர்ப்போர் தேனீக்களின் இத்தாபத்தைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டங்களைப் பிரியும் முன்னரே பிரித்துப் புதிய கூட்டங்களை உருவாக்கலாம்
  • ராணித் தேனீ முட்டையிடுவதற்குத் தேவையான இட வசதி செய்து கொடுக்க வேண்டும். இருப்பு இருந்தால் புழு அறையில் காலி அடைகள் தரலாம். இல்லையென்றால் அடை அஸ்திவாரத் தாள் பொருத்தப்பட்ட காலிச் சட்டங்களைப் புழு அறையில் தரலாம். இதன் மூலம் பெட்டியினுள் இடநெருக்கடி காரணமாக ஏற்படும் புழுக்கத்தைக் குறைக்க முடியும்
  • Image courtesy : wikipedia
  • மதுர வரத்து துவங்கும் பொழுது கூட்டங்களுக்கு உரிய நேரத்தில் தேன் அறைகளைக் கொடுக்க வேண்டும். தேன் சேமிப்பிற்கான இடத் தேவை பூர்த்தி செய்யப்படும் பொழுதும் கூட்டம் பிரியும் உணர்வு குறையும். இதனால் கூட்டம் பிரிதலைத் தாமதப்படுத்தலாம்
  • தேனீக் கூட்டங்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் கட்டுப்பட்டு இருக்கும் சமயம் கூடுதலாகக் கொட்டும். அத்தகைய தருணங்களில் அடிக்கடி புழு அடைகளைக் கவனமாகச் சோதனை செய்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை ஒன்று விடாது அழித்துவிட வேண்டும். அடையின் கீழ் விளிம்பில் கட்டப்பட்டு இருக்கும் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைத் தொடர்ந்து அழித்தால், தேனீக்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை அடையின் மையப் பகுதியில் கட்டும் இத்தகைய அறைகளைக் கண்டு பிடித்து அழிப்பது சற்று கடினம். ஓரிரு அறைகள் தப்பினாலும் கூட்டம் உறுதியாகப் பிரிந்து விடும். எனவே இம்முறை ஓரளவிற்கு மட்டுமே பயன் கொடுக்கும்
  • ராணித் தேனீயின் இறக்கைகளை வெட்டுவதன் மூலமும், வாயில் தகட்டை நுழைவு வழி முன் வைத்தும் ராணித் தேனீ கூட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம். இதனால் ராணித் தேனீ கூட்டைவிட்டுப் பணித் தேனீக்களுடன் பறந்து செல்ல இயலாது. எனவே ஒருவேளை ராணி இல்லாது பணித் தேனீக்கள் பிரிந்து சென்றாலும் அவை அனைத்தும் மீண்டும் கூட்டிற்கே திரும்பி வந்துவிடும்
  • ஒவ்வொரு ஆண்டும் ராணித் தேனீயை மாற்ற வேண்டும். இதனால் கூட்டம் பிரதலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்
  • பிரிந்து சென்றாலும் முதன்மை கூட்டத்தைத் தனியே பிடித்து வைக்கலாம்
  • பிரிந்து செல்லும் பின் கூட்டங்களைக் காலம் தாழ்த்தாது பிடித்துத் தாய்க் கூட்டங்களுடன் இணைந்து வைப்பதே நல்லது
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Wednesday, 15 March 2017

இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:தேனீ வளர்க்கலாம் பகுதி-VIII

இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:
தேனீ வளர்ப்பை வணிக ரீதியில் வெற்றிகரமாக வளர்க்கத் தேனீக் கூட்டங்களைக் கூடுதலாக உணவு கிடைக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தேனீக் கூட்டங்கள் உணவின்றி வலுக் குன்றுவதைத் தடுக்கவும். கூட்ட வளர்ச்சியைக் கூட்டிக் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும். இத்தகைய இடப்பெயர்ச்சி முறைத் தேனீ வளர்ப்பு குமரி மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றது.

சில குறிப்புகள்:
  • தேனீப் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஏற்ற நேரம் இரவு நேரமே
  • தேனீப் பெட்டிகளின் நுழைவு வழி, வண்டி செல்லும் வழிக்கு இணையாக இருக்கும்படி டெம்போ வண்டியில் தேனீ பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்
  • ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூட்டங்களை வைப்பது தேன் மகசூல் குறைவிற்கு வழி வகுக்கும்
  • வலுவான கூட்டங்களே கூடுதலாகத் தேன் சேகரிக்கும்
  • மதுர வரத்து துவங்கும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறை சர்க்கரைப்பாகு கொடுத்துக் கூட்டத்தை வலுப்படுத்த வேண்டும்
  • சர்க்கரைப் பாகு கொடுப்பதை மதுர வரத்து தொடங்கியவுடன் நிறுத்திவிட வேண்டும்
  • உரிய நேரத்தில் கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றபடி இரண்டு முதல் மூன்று தேன் அறைகள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொன்றாகக் கொடுக்க வேண்டும்
  • கூடுதல் வளர்ச்சியுள்ள கூட்டங்களைத் தேவைக்கு ஏற்பப் பிரித்து புதிய கூட்டங்களையும் புதிய ராணித் தேனீக்களையும் உருவாக்க வேண்டும்
  • ஆண்டிற்கு ஒரு முறை ராணியை மாற்றுவதன் மூலம் கூட்டம் பிரிதலைத் தடுக்கவும் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும்
  • விரைவான வளர்ச்சி நோய் இல்லாமை மற்றும் கூடுதலாகத் தேன் மகசூல் தந்த கூட்டங்களில் உருவாகும் மூடப்பட்ட ராணி அறைகளை நீக்கி எடுத்துப் பிரித்த கூட்டத்திற்கும் ராணியை நீக்கி விட்டுக் கொடுக்க வேண்டும்
  • புழு அறையில் கறுத்த ஓர அடைகளை நீளுவாக்கில் துண்டுகளாக அறுத்துத் தேன் அறைச் சட்டத்தின் அடிக் கட்டையில் ரப்பர் வளையம் கொண்டு பொறுத்தித் தேன் அறையில் அடை எடுத்த இடத்தில் காலிச் சட்டத்தைக் கொடுக்க வேண்டும்
  • தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாக ஒவ்வொரு சட்டத்திற்கும் இடையே சிறிது கூடுதல் இடைவெளி விட்டு வைப்பதன் மூலம் பருமனான தேன் அடைகளைப் பெற இயலும். இதனால் கூடுதலாகத் தேன் மகசூல் கிடைக்கும். மேலும் தேன் எடுக்கும் பொழுது தேன் அறைகளின் மெழுகு மூடிகளை எளிதாகச் சீவி நீக்கலாம்
  • தேன் அறைகள் முழுவதும் மூடப்பட்ட பின்னர் தேன் அடைகளைத் தேன் எடுப்பதற்கு எடுத்தால் நல்ல தரமான தேன் பெற இயலும்
  • தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை உடனே தேனீக் கூட்டத்திற்குக் கொடுத்துவிட வேண்டும்
  • மதுர வரத்து முடிந்தவுடன் ஒரு தேன் அறையை மட்டும் விட்டு விட்டு மீதித் தேன் அறைகளை நீக்கிவிட வேண்டும்
  • தேனீக் கூட்டங்களை மதுரவரத்து அதிகம் கிடைக்கும் பல இடங்களுக்கு அடுத்தடுத்து எடுத்துச் செல்லுவதன் மூலம் கூடுதல் தேன் மகசூல் பெற இயலும்
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Tuesday, 14 March 2017

தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள் மற்றும் மதுர வரத்துக் காலப் பராமரிப்பு : தேனீ வளர்க்கலாம் பகுதி-VII

தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள்

மதுரம் தரும் பயிர்கள்:
ரப்பர், புளி, பாட்டில், புருசு, இலவம், இலுப்பை, சில்வர் ஓக், லாடப் பூ, அகத்தி, அரப்பு, கடுக்காய், புங்கம், வேம்பு, அர்ச்சுன மரம், சிசு மரம், தீக்குச்சி மரம், செம்மரம், லிட்சி இலந்தை, சோயா மொச்சை, குதிரை மசால், காப்பி, தும்பை, கள்ளிப் பூண்டு 

மகரந்தம் தரும் பயிர்கள்:
கரு வேல், வெள் வேல், குடை வேல், ஆண் பனை, பாக்கு, தென்னை,  நெல்லி, தக்காளி, கத்தரி, பறங்கி  பூசணி, வெள்ளரி, சீமை வெள்ளரி, சுரை, சவ் சவ், சோளம், கம்பு, மக்காச்சோளம்.

மதுரம் மற்றும் மகரந்தம் தரும் பயிர்கள்:
தைல மரம், சீமைக் கருவேல், கரக்கொன்றை, வேங்கை, நாவல், வாகை, முந்திரி, கொடுக்காப்புளி, ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம், செர்ரி, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, வாழை, முருங்கை, வெங்காயம், காரட், முட்டைக்கோஸ், பூக்கோஸ், நில சம்பங்கி, அவரை, துவரை, உளுந்து, காராமணி, கொண்டக் டகலை, பருத்தி, ஏலக்காய், கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பேய் எள், ஆன்டிகோனான், கடுகு, நெருஞ்சி, ஓணான் கொடி, துத்தி.

மதுர வரத்துக் காலப் பராமரிப்பு:

மதுர வரத்து துவுங்கிவிட்டதற்கான அறிகுறிகள்:
  • தேனீக்கள் நுழைவு வாயில் சுறுசுறுப்பாக இயங்கும்
  • தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுத்தால் அதனை எடுக்காது
  • தேனீக்கள் மதுரத்திலுள்ள நீர் அளவைக் குறைத்து தேனாகக் கெட்டிப்படுத்தும் பொழுது காற்றில் ஒருவித மலர் வாசனை வீசும்
  • தேனீக்கள் சட்டங்களுக்கு இடையில் வெள்ளை அடை கட்டும்
  • தேனீக்கள் அடை அறைகளில் விளிம்பில் வெள்ளை மெழுகினை வைக்கும்
  • தேனீக்கள் அடைகளைப் புதிப்பிக்கும் பணியிலும் புது அடைகள் கட்டும் பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபடும்
  • அடைகளை ஆய்வு செய்யும் பொழுது திறந்த அடை அறைகளிலிருந்து மதுரம் சொட்டும்
மதுர வரத்திற்குக் கூட்டங்களைத் தயார் செய்தல்:
  • தேனீப் பெட்டிகள் வைப்பதற்கு ஏற்ற அதிக மதுரவரத்து உள்ள இடங்களை முன் கூட்டியே தெரிவு செய்ய வேண்டும்
  • மதுர வரத்து துவங்குவதற்கு ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு முன்னரே கூட்டங்களை தயார் செய்ய வேண்டும்
  • தேன் அறைகள், காலி அடைகள், வெற்றுச் சட்டங்கள், அடை அஸ்திவாரத்தாள், தேன் எடுக்கும் கருவி ஆகிய சாதனங்களைத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
  • சர்க்கரைப் பாகு மற்றும் மகரந்த உணவு கொடுத்துக் கூட்டங்களை வலுப்படுத்த வேண்டும்
  • ஆண்டுக்கு ஒரு முறை ராணித் தேனீயை மாற்ற வேண்டும்
  • கூட்டங்களுக்கு புதிய ராணித் தேனீ தர வேண்டும்
  • வலுக்குன்றிய கூட்டங்களை இணைக்க வேண்டும். வலுவான கூட்டங்களால் மட்டுமே கூடுதலாகத் தேனைத் திரட்டிச் சேமிக்க இயலும்
Image courtesy : wikipedia
மதுர வரத்தின் போது பராமரிப்பு:
  • ராணித் தேனீ முட்டையிடப் போதிய இட வசதி செய்து தர வேண்டும்
  • உரிய நேரத்தில் தேன் அறைகள் கொடுக்க வேண்டும். காலித் தேன் அடைகள் கொடுத்தால் தேனீக்கள் விரைந்து தேனை சேமிக்கும்
  • காலி அடைகள் இல்லைளென்றால் புழு அறையிலுள்ள தேன் அடையை அறுத்து தேன் அறை சட்டங்களில் கட்டிக் கொடுக்க வேண்டும்
  • தேன் அறையில் ராணித் தேனீ முட்டையிடுவதைத் தடை செய்யப்புழு அறைக்கும் இடையில் ராணித் தேனீ தடைத் தகட்டை வைக்க வேண்டும் அல்லது அவ்வாறு முட்டையிடப்பட்ட தேன் அடைகளில் தண்ணீரை தெளிப்பதன் மூலம் இப்பிரச்சனையைத் தவிர்க்க இயலும்
  • தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாகத் தர வேண்டும். இதனால் ஒவ்வொரு தேன் அடைச் சட்டத்திலும் தேன் கூடுதலாகச் சேமிக்கப்படும். மேலும் மூடப்பட்ட தேன் அறைகளின் கூடிகளை எளிதாகச் சீவலாம்
  • தேன் அடைகளில் மூன்றில் இரண்டு பங்கு அறைகள் மூடப்பட்ட நிலையில் தாமதம் செய்யாமல் தேன் அறைகளைத் தேன் எடுப்பதற்கு எடுக்க வேண்டும்
  • தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை மீண்டும் தேனீகு் கூட்டத்திற்கு உடனடியாக கொடுத்துவிட வேண்டும்
  • கூட்டம் பிரிந்து விடாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
 நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Sunday, 12 March 2017

தேனீ வளர்ப்பு சாதனங்கள் : தேனீ வளர்க்கலாம் பகுதி-VI

1. தேனீப் பெட்டிகள்
நியூட்டன் பெட்டி BIS Hives

தேனீ வளர்ப்பிற்கு வேண்டிய மிக முக்கியமான சாதனம் தேனீப் பெட்டிகளாகும். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச் சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக் கட்டையுடன் இரண்டு பக்கக் கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியினுள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு ஆடையும் மரச் சட்டத்துடன் தனித்து வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. மரச் சட்டங்களுக்கு இடையேயும் சுற்றிலும் போதிய இடைவெளி தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தேனீக்கள் அடையில் அமர்ந்து வசதியாகத் தங்கள் பணிகளைச் செய்ய முடியும். இந்த இடைவெளி தேனீ இடைவெளி எனப்படும். இந்தச் சந்து மிகச் சிறிதாக இருப்பதால் தேனீக்கள் இதில் அடை கட்டுவதில்லை. பெரிதாக இருப்பதால் தேன் பிசின் கொண்டு மூடுவதுமில்லை.


மார்த்தாண்டம் பெட்டி
தேனீப் பெட்டிகளை வடிவமைக்கும் பொழுது, சரியான தேனீ இடைவெளி கிடைக்கும் வண்ணம் பெட்டியும் மரச் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பெட்டிகள் மற்றும் சட்டங்களின் அளவுகள் ஒரு நூல் அளவு கூடக் கூடவும் விடாது, குறையவும் விடாது. தேனீ இடைவெளி கூடுதலாக இருக்கும் பொழுது தேனீக்கள் அடைகளை ஒழுங்காகக் கட்டாது. தேவையற்ற உதிரி அடைகளையும் இணைப்பு அடைகளையும் கட்டும். மேலும் சட்டங்களைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் பெட்டியை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்களை கொட்ட நேரிடும். இத்தகைய அடைகளில் சேமிக்கப்பட்ட தேன் மெழுகும் வீணாகின்றது. 


தேனீக்களின் இனத்திற்கு ஏற்பவும் தேனீக்கு உணவு கிடைக்கும் அளவைப் பொறுத்தும் தேனீப் பெட்டிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் இந்தியத் தேனீக்கள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன. இப்பெட்டிகள் மார்த்தாண்டம் பெட்டிகள் எனப்படும். அளவில் சிறியதாக இருப்பதால் இப்பெட்டிகளைத் தேன் சேகரிப்பிற்காகப் பல இடங்களுக்கும் நெடுந்தொலைவு எளிதாக எடுத்துச் செய்ய இயலும். இப்பெட்டியில் புழு அறையில் ஆறு சட்டங்கள் இருக்கும். குறைவான மதுர வரத்துள்ள இடங்களுக்கும் ஏற்றது. இப்பெட்டி எளிய வடிவமைப்பும் குறைவான விலையும் உள்ளதால் தேனீ வளர்ப்பிற்கு அதிக அளவு தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றது.

தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். அதனால் பெட்டியில் தேனீக்களும் அவற்றின் எதிரிகளும் புகுந்து செல்லப் பல நுழைவு வழிகள் உண்டாக்கும். மேலும் மழைத் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். தேனீக்களால் தங்களைத் தங்கள் எதிரிகளிடமிருந்து சரிவரத் தற்காத்துக் கொள்ள இயலாது. பெட்டிகளில் வெடிப்புகள் பிறவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துள் இருக்க வேண்டும்.

தேனீபு் பெட்டியின் பாகங்கள்
அடிப் பலகை
அடிப் பலகை ஒரே பலகையால் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுப் பலகைகளை இணைத்து உருவாக்கும் பொழுது இடைவெளி சிறிதும் இல்லாமல் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும்.  அடிப்பலகை தேனீப் பெட்டியை விட்டுச் சற்று முன்பக்கம் நீட்டி வைக்கப்பட்டுள்ளது. நீண்டுள்ள இப்பகுதியைப் பறந்து வரும் தேனீக்கள் இறங்கும் தளமாகப் பயன்படுத்துகின்றன.

புழு அறை
புழு அறையை அடிப் பலகையின் மேல் வைக்க வேண்டும். இந்த அறையின் அகல வாட்டத்தில் இருப்புறத்திலும் உள்ள இரண்டு காடிகள், சட்டங்களைத் தொங்க விட ஏற்றதாயுள்ளது. இச்சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் புழு வளர்ப்பு நடைபெறுகின்றது. சட்டங்கள் உட்சுவரையும் அடிப் பலகையையும் உரசாத வண்ணம் தேனீ இடைவெளி கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் பெட்டியின் முன் புறச் சுவரின் அடியில் தேனீக்கள் வந்து செல்வதற்கான ஒரு நுழைவு வழி அமைக்கப்பட்டுள்ளது.

தேன் அறை
தேன் அறையைப் புழு அறையின் மேல் வைக்க வேண்டும். இதனுள் தொங்க விடப்பட்டுள்ள சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் உபரியாகக் கிடைக்கும் தேன் சேமிக்கப்படுகின்றது. அந்தச் சட்டங்களும் புழு அறைச் சட்டங்கள் உட்சுவர் மற்றும் உள் மூடியை உரசாத வண்ணம் உரிய தேனீ இடைவெளி தரப்பட்டு இரண்டு காடிகளில் தொங்க விடப்பட்டுள்ளன. 

உள் மூடி அல்லது சிகைப் பலகை
உள் மூடி தேன் அறையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே ஒரு பெரிய துறை கம்பி வலை கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கூட்டினுள் காற்றோட்டத்திற்கு உதவுகின்றது. கம்பி வலையை சிறிது நெம்பி ஒரு தேனீ செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இதனால் உள் மூடிக்கும் இடையே அகப்பட்ட தேனீக்கள் கூட்டினுள் செல்ல இயலும். உள் மூடி பெட்டியினுள் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் வெளி மூடியினுள் தேனீக்களை அடை கட்டுவதைத் தவிர்க்கவும் உதவுகின்றது.

மேல் மூடி அல்லது கூரை
கூரை தட்டையாகவோ அல்லது இருபுறமும் சரிந்தோ இருக்கும். நியூட்டன் தேனீப் பெட்டியில் கூரையும் உள் மூடியும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். தட்டையாக உள்ள மேல் மூடியின் மேல் தகரத் தகட்டைப் பொருத்துவதால் மரத்தாலான மூடி மழையினால் பாதிப்படையாது. மார்த்தாண்டம் பெட்டியில் மேல் மூடி மட்டுமே இருக்கும் உள் மூடி இருக்காது.

2. அடை அஸ்திவாரத் தாள்
அடை அஸ்திவாரத் தாள் தேன் மெழுகிலாலான அறுகோணப் பதிவுகளுடன் கூடிய மெழுகுத் தாள் ஆகும். அப்பதிவுகளின் மேல் தேனீக்கள் பணித் தேனீ வளர்ப்பு அறைச் சுவர்களை இருபுறமும் கட்டுகின்றன. இந்த அடை அஸ்திவாரத் தாளை சட்டங்களின் மேல் கட்டையின் உட் பகுதியில் பொருத்த வேண்டும். அடை அஸ்திவாரத் தாள் மீது அடை கட்டப்படும் பொழுது
  • அடைகள் செங்குத்தாகவும் சீராகவும் கட்டப்படும்
  • கட்டப்படும் அடை அறைகள் ஒரே வடிவில் சீராக இருக்கும்
  • அடை கட்டப்படும் பணி சுலபமாகவும் விரைவாகவும் நடைபெறும்
  • அடைகள் உறுதியானதாக இருப்பதால் அவற்றைத் தேன் எடுக்கும் கருவியில் வைத்து சுற்றும் பொழுது சேதமாவதில்லை
  • தேனீக்கள் தேன் வரத்து மிகும் காலங்களில் குறுகிய காலத்திற்குள் அடைகளைக் கட்டித் தேனைச் சேமிக்க இயலும்
  • குறைந்த மெழுகுச் செலவில் அடைகள் கட்டப்படும்
  • தேனீக்கள் அடை கட்டுவதற்காக தேன், காலம், சக்தி ஆகியவற்றை விரயம் செய்வது குறைக்கப்படும்
3. தடுப்புப் பலகை
தடுப்புப் பலகை மரத்தினாலான பலகை. இதனை அடைச்சட்டங்களுடன் புழு வளர்ப்பு அறையில் தொங்க விடலாம். வலுக் குன்றிய கூட்டங்களில் உள்ள காலி அடைகளை நீக்கிய பின்னர், இறுதி அடையை ஒட்டி இத்தடுப்புப் பலகையை வைக்க வேண்டும். இதனால் தேனீக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புழு அறையில் கொள்ளளவு குறைக்கப்படுகின்றது. அவ்வாறு இப்பலகையை ஒரு நகரும் சுவராகப் பயன்படுத்தலாம். மேலும் கூட்டின் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் தேனீக் கூட்டங்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கவும் இப்பலகை உதவுகிறது.

4. பணித் தேனீ நீக்கும் பலகை
பணித் தேனீ நீக்கும் பலகை மரத்தாலான ஒரு பலகை. அதன் நடுவே ஒரு வழிப்பாதை ஒன்று உள்ளது. இதனைப் புழு அறைக்கும் தேன் அறைக்கும் நடுவே வைக்க வேண்டும். இரவு வேளையில் தேன் அறையில் உள்ள பணித் தேனீக்கள் இப்பலகையில் உள்ள ஒரு வழிப்பாதை மூலம் புழு அறைக்கு வந்து விடும். அவ்வாறு வந்த பணித் தேனீக்கள் மீண்டும் தேன் அறைக்குள் செல்ல இயலாது. எனவே இப்பலகை தேன் அறையிலிருந்து பணித் தேனீக்களை விரட்டப் பயன்படுகின்றது.

5. ராணித் தேனீ நீக்கி
ராணித் தேனீ நீக்கி சீராகத் துளையிடப்பட்ட நாகத் தகட்டால் ஆனது. ராணித் தேனீ பணித் தேனீக்களை விட உருவில் பெரிதாக இருப்பதால் இந்நீக்கியில் உள்ள வழியே ராணித் தேனீயால் நுழைய இயலாது. இந்நீக்கியை புழு அறைக்கும் தேன் அறைக்கும் இடையில் வைக்க வேண்டும். இதனால் ராணித் தேனீ தேன் அறைக்குச் சென்று முட்டை வைப்பது தவிர்க்கப்படுகின்றது. ஆகவே தூய்மையான தேன் பெறவும் வழி பிறக்கின்றது.

6. வாயில் தகடு
வாயில் தகடு சீராகத் துறையிடப்பட்ட ஒரு நாகத் தகடு ஆகும். இத்தகட்டை நுழைவு வழி முன் வைக்க வேண்டும். இந்த தகட்டில் உள்ள துறை அளவு சிறியதாக இருப்பதால் ராணித் தேனீயால் கூட்டை விட்டு வெளியேற முடியாது. இத்தகடு புதிதாகப் பிடித்த தேனீக் கூட்டத்திலிருந்து ராணி தப்பிச் செல்வதைச் தடுக்கவும் கூட்டம் பிரிவதைத் தடுக்கவும் உதவுகின்றது.

7. ஆண் தேனீப் பொறி
 ஆண் தேனீப் பொறி ஒரு மரத்தாலான காடியுடன் கூடிய கட்டை ஆகும். இப்பொறியை நுழைவு வழி முன் வைக்கும் பொழுது நுழைவுப் பாதையின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் பெட்டியை விட்டு வெளியே பறந்து சென்ற ஆண் தேனீக்கள் மீண்டும் உள்ளே வர இயலாது. ஆனால் பணித் தேனீக்கள் எளிதாக இப்பொறி வழியே சென்று வந்து தங்களின் பணிகளைச் செய்ய முடியும்.

8. முகவலை
முகவலை கருப்பு நிற நைலான் கொசு வலையினால் ஆனது. தொப்பியுடன் கூடிய இதனைத் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும் பொழுது முகத்திற்கும் திரைக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். இதனை அணிவதால் தேனீக்கள் முகத்தில் கொட்டுவதும் தவிர்க்கப்படுகின்றது.

9. கையுறை
கையுறை காடாத் துணி அல்லது மெல்லிய ரப்பர் அல்லது தோலினாலானது. புதிதாகத் தேனீ வளர்ப்பைத் துவக்கியவர்கள் தேனீக்களை முறையாக கையாள தெரிந்து கொள்ளும் வரை, கைகளில் தேனீக்கள் கொட்டி விடாமல் இருப்பதற்காக இதனை அணிந்து கொள்ளலாம்.

10. புகைக் குழல்
புகைக் குழல் மிகவும் அவசியமான ஒரு கருவி. புனல் வடிவிலான மூடியுடன் கூடிய ஒரு டப்பாவினுள் சாக்குத்தூள், காகிதச் சுருள், மரப்பட்டைத் துண்டுகள், தேங்காய் நார், காய்ந்த இலை போன்றவற்றை இட்டு எடுக்கும் புகை உண்டாகின்றது. இப்புகை டப்பாவின் அடியில் இணைக்கப்பட்டுள்ள துருத்தியை அழுத்தும்பொழுது மூடியில் உள்ள துவாரம் வழியே வெளிப்படுகின்றது. புகை தேனீக்களிடம் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகின்றது. புகையால் பயந்த தேனீக்கள் சிறிது தேனைக் குடித்தவுடன் அமைதியாகி விடுகின்றன. இதனால் தேனீக்களில் கொட்டும் தன்மை வெகுவாகக் குறைகின்றது.

தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்து முடிக்கும் வரை புகைக் குழலில் புகை இருத்தல் வேண்டும். புகை வெண்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். தேனீக் கூட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது புகையைத் தேவைப்படும் பொழுது மட்டும் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

11. மெழுகு மூடி சீவும் கத்தி
மெழுகு மூடி சீவும் கத்தி நீளமானது. இரு புறமும் கூர்மையானது. மரக் கைப்பிடி உடையாது. இக்கத்தி கொண்டு தேனடைகளின் மெழுகு மூடிகளைச் சீராகச் சீவலாம்.

12. தேனீ புருசு
தேனீக்களைத் தேன் அடைகளிலிருந்து அப்புறப்படுத்தவும் தேனீக் கூட்டங்களைப் பிரிக்கும் சமயத்தில் தேனீக்களை புழு அடைகளிலிருந்து நீக்கவும் தேனீ புருசு உதவுகின்றது. இதன் கைப்பிடி மரத்தால் ஆனது. இதன் குச்சங்கள் மிருதுவானவை.

13. தேன் எடுக்கும் கருவி
தேன் எடுக்கும் கருவி உருளை வடிவினாலான ஒரு பாத்திரமாகும். இப்பாத்திரம் பித்தளை, நாகத்தகடு அல்லது எவர்சில்வரால் ஆனது. இதனுள் ஒரு வலைப் பெட்டியுள்ளது. அவ்வலைப் பெட்டியினுள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தேனடைச் சட்டங்களைச் செங்குத்தாகச் செருகி வைக்கலாம். மேலும் இவ்வலைப் பெட்டி இரண்டு பல்சக்கரங்கள் மூலம் ஒரு கைப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியைச் சுற்றும் பொழுது மைய விலக்கு விசை காரணமாக அடையிலிருந்து தேன் துளிகள் சிதறி விழுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட தேன் இக்கருவியின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு சிறு குழாய் மூலம் வெளிவரும். இக்கருவியைப் பயன்படுத்துவதால்
  • தேன் அடைகள் சேதமாவது இல்லை
  • தேன் அடைகளை மீண்டும் பயன்படுத்தலாம்
  • தூய்மையான தேன் பெறலாம்
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Saturday, 11 March 2017

தேனீக்களும் பயிர் மகசூலும்: தேனீ வளர்க்கலாம் பகுதி-V

Image courtesy : wikipedia


தேனிக்களும் பயிர் மகசூலும்:
அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் தேனீக்களை மேலை நாட்டினர் வேளாண் தேவதைகள் எனப் போற்றுகின்றனர். 

தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்களின் பூக்கள், தேனீக்களைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான நிறமும் நல்ல மணமும் பெற்றுள்ளன. மேலும் இவை தேனீக்களுக்கு மதுரத்தையும் மகரந்தத்தையும் உணவாகத் தருகின்றன. உணவிற்காக மலரை நாடி வரும் தேனீக்களின் உடம்பில் மகரந்தப் பொடி ஒட்டிக் கொள்கின்றது. பின்னர் தேனீக்கள் மற்றொரு மலருக்கு உணவு தேடிச் செல்லும் பொழுது உடம்பில் ஒட்டிக் கொண்ட மகரந்தத்தூள் சூல்முடியைச் சென்று அடைகின்றது. இதனால் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை அமைப்பும் சில சுபாவங்களும் தேனீக்களால் தனித் தன்மை வாய்ந்த உடல் அமைப்பும் சில சுபாவங்களும் தேனீக்களால் பயிரில் அதிக அளவில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற பெரிதும் உதவுகின்றன.

தேனீக்களின் சிறப்பியல்புகள்:
  • உடம்பு முழுவதும் உள்ள கிளையுடன் கூடிய ரோமங்களில் மகரந்தத் தூள் எளிதாக ஒட்டிக் கொள்கின்றது
  • தேனீக்களின் கால்கள் மகரந்தத் தூளைச் சுமந்து வரவும் அவைகளின் நீளமான நாக்கு மதுரச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் மதுரத்தை நக்கி, உறிஞ்சவும் ஏற்றவாறு உள்ளன
  • தேனீக்கள் விசுவாசத்துடன் ஒரு பயிர் இனத்தைச் சார்ந்த மலர்களை, பூக்கும் காலம் முடியும் வரை தொடர்ந்து நாடிச் சென்று உணவு திரட்டுகின்றன
  • புரதம் மிகுந்த மகரந்தம் வளரும் புழுக்களுக்கும், இளந்தேனீக்களுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. எனவே வயல் வெளித் தேனீக்கள், தேவை கருதி ஆர்வத்துடன் அதிக அளவு மகரந்தத்தைத் தேடிச் சேமிக்கின்றன. அவ்வாறு செயல்படும் பொழுது தேனீக்கள் அதிக அளவில் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழி வகுக்கின்றன
  • கதிரவன் தோன்றியதிலிருந்து மறையும் வரை தேனீக்கள் பல மணி நேரம் உணவிற்காக மலரை மீண்டும் நாலடி வருகின்றன. இதனால் தேனீக்கள் பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெறத் துணை புரிகின்றன
  • தேனீக் கூட்டங்களை எளிதில் தேவையான இடத்திற்கு தேவையான எண்ணிக்கையில் எடுத்துச் சென்று வைத்துப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறப் பயன்படுத்தலாம்
  • அனுபவம் மிக்க வயல் வெளித் தேனீக்கள் உணவு கிடைக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பிற பணித் தேனீக்களுக்கு நடன மொழி மூலம் அறிவிப்பதால் தகவலறிந்த தேனீக்களும் அதிக எண்ணிக்கையில் பயிரை நாடிச் சென்று மகரந்த சேர்க்கை நடைபெற உதவுகின்றன
பராமரிக்கும் முறைகள்:
  • மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் தேனீ கூட்டங்கள் வலுவானதாக இருக்க வேண்டும்
  • போதிய அளவு தேன் மற்றும் மகரந்த இருப்பு இருக்க வேண்டும்
  • புழு அடையில் தேனீயின் வளர்ச்சிப் பருவங்கள் அனைத்தும் இருத்தல் அவசியம்
  • மொத்த அடைப் பரப்பில் குறைந்தது கால் பகுதியிலாவது புழுக்கள் வளரும் நிலையில் இருக்க வேண்டும். புழுக்களின் உணவுத் தேவைக்காகப் பணித் தேனீக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிக அளவு மகரந்தம் திரட்டி வரும். அதனால் அயல் மகரந்தச் சேர்க்கை பயிரில் கூடுதலாக நடைபெறும்
  • ராணித் தேனீ சிறப்புறப் பணிபுரிய வேண்டும்
  • வீட்டுத் தேனீக்களும், வயல் வெளித் தேனீக்களும் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்
  • மகரந்தம் மற்றும் தேனைச் சேமித்து வைக்கக் காலி அடைகள் தேனீப் பெட்டிகளில் இருத்தல் வேண்டும்
  • இரண்டு அல்லது மூன்று தேனீப் பெட்டிகளை ஒரு தொகுதியாகத் தோட்டத்தின் மத்தியில் வைத்தால் தேனீக்கள் குறைந்த அளவு சக்தியைச் செலவழித்து உணவு தேடிக் கொண்டு வரும்
  • பயிர்கள் பூக்கத் தொடங்கியதுமே தேனீப் பெட்டிகளைத் தோட்டத்தில் கொண்டு சென்று வைக்க வேண்டும்
  • பொதுவாக ஓர் ஏக்கருக்கு ஒரு தேனீப் பெட்டி போதுமானது
  • பயிர்கள் பூத்திருக்கும் சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்த்தல் வேண்டும். பயிர் பூக்கும் சமயங்களில் பயிர் பாதுகாப்பு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் தேனீக்களை அதிக அளவு பாதிக்காத பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்
  • எந்தப் பயிரில் தேனீக்களைக் கொண்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்த வேண்டுமோ, அப்பயிரின் மலர்களைச் சர்க்கரைப் பாகில் ஊற வைத்து முந்திய நாள் இரவு தேனீக்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் மறுநாள் தேனீக்கள் அம்மலருள்ள பயிரை நாடி உணவு தேடச் செல்லும்
பயிர் மகசூலில் தேனீக்களின் பங்கு:
  • தேனீக்களால் பயிறு வகைப் பயிர்கள் எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை கூடுதலாக நடைபெறுகின்றது. குறிப்பாக ஆப்பிள், பேரிக்காய், தர்பூசணி, முலாம் பழம், எலுமிச்சை போன்ற பயிர்களின் பழ மகசூலும், பழங்களின் தரமும் கூடுவதற்கு தேனீக்களின் வரவு தேவைப்படுகின்றது
  • தேனீக்களால் வெள்ளரி மகசூலை இரட்டிப்பாக்க முடியும். மேலும் காரட், பூக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிப் பயிர்களில் தரமான விதைகளைக் கூடுதலாக உற்பத்தி செய்யத் தேனீக்கள் உதவுகின்றன
  • சூரியகாந்தி, எள், பேய் எள் மற்றும் கடுகு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்களில் உயர் மகசூல் பெறத் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. தேனீக்களால் சூரியகாந்திப் பயிரில் விதை மகசூல் கூடுவதுடன் எண்ணெய் சத்தும், புரத அளவும், விதை எடையும், விதைகளின் முளைப்புத் திறனும் கூடுகின்றது
  • தென்னந் தோப்புகளில் தேனீப் பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரகத் தென்னையில் குரும்பை உதிர்வது குறைந்து காய் மகசூல் 13 விழுக்காடு கூடுகின்றது
  • தேனுக்காக மட்டும் தேனீ வளர்ப்பு என்ற நிலை மாறி, மேலை நாடுகுளில் உள்ளது போல பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகவும் திட்டமிட்டுத் தேனீ வளர்ப்பு நடைபெற்றால் தான் நாம் பயிர் மகசூலைக் கூட்ட இயலும். வீரியக் காய்கறி விதை உற்பத்திக்கும் தேனீக்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையத்திலும், இயற்கை விவசாயத்திலும் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளுவதன் மூலமாகவும் இந்த நோக்கை எட்ட இயலும்.
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Friday, 10 March 2017

தேனீப் பண்ணை வைக்க இடதேர்வு : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-IV



இடத் தேர்வு: தேனீப் பண்ணை அமைக்கத் தெரிவு செய்யும் இடம் தேனீக்களுக்கும் தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம். தேனீக் கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாகக் காணப்படுகின்றதோ அந்த இடங்கள் பொதுவாகத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை
  • தேனீ வளர்ப்பு நல்ல வெற்றி பெறவும் அதிகத் தேன் மகசூல் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருத்தல் வேண்டும்
  • தேனீக்களுக்குத் தேனை உற்பத்தி செய்ய மதுரமும், புழுக்களை வளர்க்க மகரந்தமும் அதிக அளவு தேவைப்படுகின்றன. ஒரு இடத்தில் தேனீக்கு உணவு தரும் சில மரம், செடி, கொடிகள் இருப்பதையோ, அல்லது சில ஏக்கர் இருப்பதையோ கொண்டு அந்த இடம் வணிக ரீதியாக தேனீ வளர்க்க வேண்டும் என்றால் அதன் அருகில் பல நூறு ஏக்கரில், தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்கள் இருத்தல் வேண்டும். அப்பயிரிகளிலிருந்து தரமான மதுரம் உற்பத்தி செய்யும் மலர்கள் மிகுந்த எண்ணிக்கைகளில் பூத்து இருக்க வேண்டும். ஓர் இடத்தில் கிடைக்கும் மதுர அளவைப் பொறுத்து அவ்விடத்தில் வைக்கப்படும் தேனீக்கூட்டங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்
  • தேனீக்களுக்குத் தூய்மையான தண்ணீர் அவசியம் தண்ணீர் கூட்டின் வெப்ப நிலையைக் குறைக்கவும் அவசக் கூழ் உற்பத்திக்கும் தேனின் கெட்டித் தன்மையைக் குறைக்கவும் தேவைப்படுகின்றது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே ஒரு கிணறோ, ஓடையோ, சுனையோ அல்லது வாய்க்காலோ இருத்தல் நலம்
  • தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவ நிலை நிலவும் இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதிக வெயில் அதிவேகமான காற்று மற்றும் கன மழை ஆகியவை தேனீக்களைப் பாதிக்கும் அதிக காற்றும் மழையும் பணித் தேனீக்களின் உணவு திரட்டும் திறனையும் அவைகள் ஆயுட்காலத்தையும் பாதிக்கின்றன. அதிக சூரிய வெப்பம் காரணமாக மெழுகு அடை உருகி விடும்
  • இடம் போதிய வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும் வடிகால் வசதியற்ற இடங்களில் காற்றின் ஈரப்பதம் எப்பொழுதும் கூடுதலாக இருக்கும். இதனால் தேன் முதிர்வது பாதிக்கப்படும்
  • பயிர் பாதுகாப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் வெற்றிகரமாகத் தேனீ வளர்க்க இயலாது
  • தேனீக்களை வளர்க்க விவசாய நிலம் தேவையில்லை
  • கால்நடைகள் தேனீக்களின் கொட்டிற்கு இலக்காவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு அருகே தேனீப் பண்ணையைப் பள்ளி, சந்தை போன்ற பொது இடங்களிலிருந்து போக்குவரத்து சாலையை விட்டும் குறைத்து 100 மீட்டர் தள்ளியே அடைக்க வேண்டும். தேனீப் பண்ணையை வீட்டிற்கு அருகில் அமைக்க நேரிட்டால் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி தர வேண்டும். இதனால் தேனீக்களால் மனிதர்களுக்குக் கூடிய வரை எவ்விதத் தொந்தரவும் இருக்காது
  • ஒரு தேனீப் பண்ணைக்கும் மற்றொரு தேனீப் பண்ணைக்கும் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
  • சாலை வசதி உள்ள இடம் போக்குவரவிற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்
தேனீப் பெட்டிகளை வைக்கும் விதம்:
  • தேனீப் பெட்டிகளை நிழலில், இயன்றால் கிழக்குப் பார்த்து வைத்தல் வேண்டும். காலை வெயில் பெட்டியின் மேல்படும் பொழுது தேனீக்கள் அதிகாலையில் தங்கள் பணியைத் துவங்கும்
  • தேனீ பெட்டிகளை ஓர் ஓடு போட்ட தாழ்வாரம் அல்லது கீற்றுக் கொட்டகையின் கீழ் வைக்கலாம். இல்லையெனில் மரம் அல்லது புதர் நிழலில் அடிக்கும் வெய்யிலிருந்து பாதுகாக்க அவசியம் நிழல் செய்து தர வேண்டும்
  • தேனீப் பெட்டிகளுக்கு இடையே ஆறு அடி இடைவெளி கொடுக்கலாம். தேனீப் பெட்டிகளை அடுத்தடுத்து நெருக்கமாக வைத்தலைத் தவிர்க்க வேண்டும். இதனால் பணித் தேனீக்களை கூடுமாறிச் செல்வது தடுக்கப்படும்
  • தேனீக்களை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புபவர்கள் தேனீபு் பெட்டிகளை கொல்லைப் புறத்திலோ அல்லது மாடியிலோ வைக்கலாம். தேனீக்கள் விளக்கு ஒளியை நாடிச் செல்வதால் தேனீப் பெட்டிகளில் மீது இரவில் வெளிச்சம் படாதவாறு வைக்க வேண்டும்
  • தேனீப் பெட்டிகளை சமதளமாக உள்ள தரையில் வைக்க வேண்டும்
  • எறும்புப் புற்று அல்லது எறும்புக் கூடு உள்ள இடங்களிலும் வாய்க்காலின் உள்ளும் தேனீபு் பெட்டிகளை வைக்க கூடாது
  • தேனீபு் பெட்டிகளை வைக்கும் தாங்களின் கால்களை நீர் ஊற்றிய கிண்ணங்களில் வைக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் கலந்த ‘கிரீஸை’ தாங்கியின் கால்களில் தடவி வைக்க வேண்டும். இல்லையெனில் கிழிந்த துணியை தாங்கியின் காலைச் சுற்றிக் கட்டி அத்துணியின் கழிவு எண்ணெயைத் தடவ வேண்டும். இதனால் எறும்புத் தொல்லையைத் தவிர்க்கலாம்
  • தேனீப் பெட்டியை தாங்கியுடன் சேர்த்துக் கயிறு கொண்டு கட்டி வைப்பது நல்லது இதனால் ஒரு வேளை தேனீப் பெட்டி சாய நேரிட்டாலும் பெட்டியின் பாகங்கள் தனித்தனியே பிரித்து விழாது
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Wednesday, 8 March 2017

தேனீ ஒரு ஆச்சரிய படைப்பு : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-III

தேனீக்களோட வாழ்க்கை முறையைப் பார்த்தா... 'நாங்கள்லாம் ஆறறிவு படைச்சவங்கப்பா...'னு சொல்லிக்கறதுக்கே நாம யோசிப்போம். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க தேனீக்கள். 


கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்தில, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காக செய்தித் தொடர்புக் குழு; சொல்ற தகவலைப் புரிஞ்சுகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்து வர்ற பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உட்கார்ந்ததுமே அதுல இருக்கற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்டவை) உடம்பு சரியில்லாம போயிடற தேனீக்களுக்கு வைத்தியம் பாக்குற மருத்துவக் குழு; மருத்துவத்துக்கும் பயனில்லாம இறந்து போற தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறப்படுத்துற துப்புரவு குழு; இளம் தேனீக்களை பராமரிக்கற தாதிக்கள் குழு... இப்படி ஒரு ஒழுங்கோட தேனீக்கள் வாழற வாழ்க்கையைப் பார்த்தா... 'நாமெல்லாம் சும்மா...?'னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!

ஒரு கூட்டுல ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணித் தேனீ... ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒரு முறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடின அந்த ஆண் தேனீ, உறவு முடிஞ்சதும் இறந்துடும். அதுக்குப் பிறகு, அந்த ராணி, வேற எந்த ராஜாவோடயும் கூடாது. இப்படியரு ஒழுங்கு... அதுகளோட வாழ்க்கையில இருக்கறதைப் பார்த்தா.... அசந்து போயிடுவீங்க! 

இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழற அந்த தேனீக் கூட்டம்... முழுக்க முழுக்க வாழறது தனக்காக இல்லீங்க... உங்களுக்கு, எங்களுக்கு, இன்னும் ஊருபட்ட அளவுல கிடக்கற பல ஜீவராசிகளுக்குனுதான், அதுங்களோட காலம் கரையுது. அதாவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுஷன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கறதே இந்த தாவரங்களாலதானே! 

அதை விவசாயம்கிற பேருல நாம ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துகிட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதிஉன்னதமான புனிதத் தொழில்ல... முதல்ல இருக்கற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்த சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட அதுக்கு இணையானதுதான்... நாம செய்துகிட்டிருக்கற விவசாயத் தொழில். இது ரெண்டும் இல்லைனா... மனுஷ மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிர் வாழ முடியாது. அதனால... தேனீப்பூச்சிகளை இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஜீவனுமே கைதொழணும் சூரியனுக்கு இணையா...!

ரொம்ப நாளா பூவெடுக்காத மரங்களுக்கு பக்கத்துல தேன் பெட்டியை வச்சா, கொஞ்ச நாள்லயே அந்த மரம் பூவெடுக்கும். அது கொஞ்ச, கொஞ்சமா சேர்த்து வைக்கற தேனும் நமக்குக் கிடைக்கும். இப்படி மகசூலை அதிகரிச்சு... தேன்ங்கற அற்புதமான அமுதத்தையும் கொடுத்து... நமக்காகவே வாழற தேனீக்களுக்கு நாம எவ்வளவு நன்றியுள்ளவங்களா இருக்கணும்.

நன்றி : vikatan.com

Tuesday, 7 March 2017

தேனீ வகைகள் : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-II

தேனீ இனங்கள்
ஒவ்வொரு தேனீக் குடும்பத்திலும் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பணித் தேனீக்கள் வாழ்கின்றன.
1. ராணித் தேனீ:
  • ராணித் தேனீ ஒரு பூரண வளர்ச்சியுற்ற பெண் தேனீ. இதனால் மட்டுமே ஆண் தேனீக்களுடன் புணர்ந்து இனவிருத்தி செய்ய இயலும். இத்தேனீ பணித் தேனீயை விட உருவில் பெரியது.
  • மகரந்தம் சேகரிக்கும் அமைப்புகள் கால்களில் இல்லாததால் ராணித் தேனீயால் உணவு சேகரிக்க இயலாது. அதே போல் மெழுகுச் சுரப்பிகள் இல்லாததால் ராணித் தேனீயால் கூடு கட்டவும் இயலாது
  • நீண்டும் கூம்பியும் உள்ள வயிற்றின் நுனியினுள் இருக்கும் கொடுக்கை முட்டையிடவும், பிற ராணித் தேனீக்களையும் அவற்றின் வளர்ச்சிப் பருவங்களையும் கொட்டிக் கொல்லவும் பயன்படுத்துகின்றது
  • நன்கு வளர்ச்சி அடைந்த இரு சினைப் பைகள் முட்டைகளை உருவாக்கவும் விந்துப்பை புணர்ச்சியின் பொழுது ஆண் தேனீக்களிடமிருந்து பெறும் விந்தைச் சேமிக்கவும் உதவுகின்றன
  • தாடைச் சுரப்பிகள் இருவித அமிலங்களால் ஆன ராணிப் பொருள் எனப்படும், ஒரு விதக் கவர்ச்சிப் பொருளைச் சுரக்கின்றன. வாய் வழி உணவுப் பரிமாற்றம் மூலம் இப்பொருளை எல்லாப் பணித் தேனீக்களும் பெறுகின்றன
  • கூட்டினுள் பணித் தேனீக்களை ராணித் தேனீயின்பால் ஈர்த்து அதனைச் சுற்றி ஒரு பரிவாரம் அமைய இச்சுரப்பானது உதவுகின்றது. மேலும் இப்பொருள் புதிய ராணித் தேனீ உருவாவதையும் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியையும் தடை செய்கின்றது. ராணிப் பொருள் பணித் தேனீக்கள் அடை கட்டுதல், புழு வளர்த்தல், உணவு சேகரித்தல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கின்றது
  • புணர்ந்த நான்கு நாட்களுக்குப் பின் ராணித் தேனீ முட்டையிடத் தொடங்கும். ஆண் தேனீக்களை உருவாக்கக் கருவுற்ற முட்டைகளையும் இடும்
  • ராணித் தேனீயின் வாழ்க்கைக் காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்
பணிகள்:
  • ராணித் தேனீயானது தேனீக் கூட்டத்தின் அன்னையாகும்
  • ஒரு முட்டையிடும் இயந்திரம் போல அயராது முட்டைகள் இட்டு ராணித் தேனீக்களையும் பணித் தேனீக்களையும், ஆண் தேனீக்களையும் ஈன்று தருகின்றது
  • ராணித் தேனீயால் முட்டையிலிருந்து வரும் புழுக்களுக்கு உணவு தரவோ, அவற்றைப் பேணி வளர்க்கவோ இயலாது
  • ராணித் தேனீ புதிதாகக் கட்டப்பட்ட அடை அறைகளில் விரும்பி முட்டையிடும். கருத்த அடை அறைகளில் ராணித் தேனீ முட்டையிடுவதில்லை
  • துப்பரவு செய்யப்பட்ட புழு வளர்ப்பு அறைகளின் அடியில் ராணித் தேனீ தனித்து முட்டைகளை இடுகின்றது
  • நன்கு பணியாற்றும் ஒரு ராணித் தேனீ அனைத்து அடை அறைகளிலும் இடைவெளி இல்லாமல் சீராக நாளொன்றுக்கு சராசரியாக 500 முதல் 2000 முட்டைகள் வரை இடும்
  • முட்டையிடப் போதிய அறை வசதியில்லாத பொழுது சில நேரங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை ஓர் அறையில் இடும்
  • உடல் ஊனமுற்ற ராணித் தேனீயால் சரிவர முட்டையிட இயலாது
  • புணர்ச்சியில் தோல்வியுற்ற மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் கருவுறாத முட்டைகளை மட்டுமே இடும். அத்தகைய முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் மட்டுமே உருவாக இயலும்
ராணித் தேனீ - வாழ்க்கைக் குறிப்புகள்
வளர்ச்சிப் பருவங்கள் (நாட்களில்)
முட்டை 3
புழு 5
கூட்டுப்புழு 7-8
வளர்ச்சிக் காலம் 15-16
வாழ்நாள் (ஆண்டுகளில்)
ஆயுட் காலம் 2-3
சிறப்பான பணிக் காலம் 1.5
2. பணித் தேனீ:
பணித் தேனீ பூரண வளர்ச்சியடையாத பெண் தேனீ ஆகும்
  • பணித் தேனீக்கள் ராணித் தேனீயை விட அளவில் சிறியவை
  • உடல் முழுவதும் கிளையுடன் கூடிய ரோமங்கள் இருக்கும்
  • வயிற்று நுனியின் மேற்பகுதியில் ஒரு வாசனை சுரப்பி உள்ளது. இச்சுரப்பி ஒவ்வொரு கூட்டிற்குமான தனித் தன்மை பொருந்திய வாசனையைத் தருகின்றது. இந்த வாசனையைக் கொண்டு பணித் தேனீக்கள் தங்களின் கூடுகளை அறிந்து கொள்கின்றன
  • கொடுக்கு வயிற்றின் நுனிப் பகுதியினுள் உள்ளது. தேனீ கொட்டும் பொழுது வெளிப்படும் விஷம் அமிலச் சுரப்பியில் சுரக்கின்றது. விஷத்துடன் வெளிப்படுத்தப்படும் ‘ஐசோபென்டைல் அஸ்டேட்’ என்ற எச்சரிக்கை வேதிப்பொருள் பிற தேனீக்களைக் கொட்டிய இடத்திற்கு ஈர்த்து கொட்டத் தூண்டுகின்றது. கொட்டிய தேனீ செலுத்தப்பட்ட கொடுக்கை எடுக்க இயலாமல் இறுதியில் அதிக நீர் இழப்பு காரணமாக இறக்கின்றது
பணிகள்:
முதல் மூன்று வாரங்கள் கூட்டினுள் இருந்து கொண்டு உட்புறப் பணிகளையும் அதன் பின்னர், வாழ்நாள் முடியும் வரை வயல் வெளித் தேனீயாகி வெளிப்புறப் பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்கின்றது. இத்தேனீக்களின் பணி அவற்றின் வயதிற்கேற்ப மாறுபடுகின்றது.
பணித் தேனீ ஆற்றும் பணிகள்
வயது (நாட்கள்)
பணிகள்
1-3
அடை அறைகளைத் தூய்மை செய்தல், கூட்டின் வெப்ப நிலையைப் பராமரித்தல்
4-6
வளர்ந்த புழுக்களுக்கு மகரந்த உணவு ஊட்டுதல்
6-12
இளம் புழுக்களுக்கும், ராணித் தேனீக்கும் தேனீப்பால் கொடுத்தல்
13-18
தேனைப் பக்குவப்படுத்துதல், மகரந்தத் தூளை அடை அறைகளில் சேமித்தல், மெழுகு சுரத்தல், அடை கட்டுதல், அடை அறைகளுக்கு மூடி இடுதல்
18-21
கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல், கூட்டைக் காவல் காத்தல்
22-42
வெளிப்புறப் பணிகள்: மதுரம், மகரந்தம், தண்ணீர் ஆகியவற்றைக் கூட்டிற்குக் கொண்டு வருதல்
3. ஆண் தேனீ
ஆண் தேனீ பணித் தேனீயை விட அளவில் பெரியது. ஆனால் ராணித் தேனீயை விட அளவில் சிறியது.
புற உறுப்புகள்:
  • இரு பெரிய கூட்டுக் கண்கள் தலையின் மேல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கும். இவை எப்புறத்திலிருந்தும் எதிர்ப்படும் பொருட்களைக் காண வல்லது
  • தலையில் உள்ள இரு உணர் கொம்புகள் சற்று நீளமாகவும், பல்லாயிரக்கணக்கான நுண்ணிய நுகரும் உறுப்புகளுடனும் இருக்கும்
  • கூரிய பார்வையும், நுகரும் ஆற்றலும் புணர்ச்சிப் பறப்பின் பொழுது ராணித் தேனீயைக் கண்டறிய உதவுகின்றன
  • ஆண் தேனீக்களுக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது. ஆண் தேனீக்கள் பணித் தேனீக்களினால் உணவு ஊட்டப்படுவதையே விரும்புகின்றன
வளரும் விதம்:
  • கருவுறாத முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் உருவாகின்றன
  • புணர்ச்சியுறாத மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் இடும் எல்லா முட்டைகளும் கருவுறாது இருப்பதால், அவைகள் அனைத்திலிருந்தும் ஆண் தேனீக்கள் தோன்றுகின்றன
  • சில நேரங்களில், ராணித் தேனீக்கள் இல்லாத கூட்டங்களில் சில பணித் தேனீக்கள் ராணித் தேனீயைப் போல முட்டையிடும். இவற்றிலிருந்தும் உருவில் சிறிய ஆண் தேனீக்கள் உருவாகும்
  • முட்டையிலிருந்து புழுக்கள் மூன்று நாட்களில் வெளிப்படுகின்றன. இவை ஒரு வார காலத்தில் கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இப்புழுக்களுக்கு முதல் மூன்று நாள் தேனீப் பாலும் கடைசி நான்கு நாட்கள் தேனீ ரொட்டியும் உணவாக வழங்கப்படுகின்றது. புழுக்கள் முழு வளர்ச்சி அடைந்த பின்னர் வளர்ப்பு அறை குவிந்த மெழுகு மூடியால் மூடப்படும். கூட்டுப் புழுக்களின் வளர்ச்சி வேகம் குறைவு. இவை முழு வளர்ச்சி பெற்ற ஆண் தேனீக்களாக மாற இரு வாரங்களாகும்
  • ஆண் தேனீக்கள் வெளிவந்த 12 நாட்களுக்குப் பிறகு இவை ராணித் தேனீயுடன் புணர்ச்சிக்குத் தயாராகின்றன.
நன்றி : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக இணையதளம்

Monday, 6 March 2017

தேனீ வளர்க்கலாம் வாங்க : முதல் பகுதி

Image courtesy : Alvesgaspar (Wikipedia)


தேனின் மருத்துவகுணங்கள் பற்றி அறியாதவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பலன்கள் ஆயிரம் கொண்டது. மருத்துவத்திற்காக மட்டுமின்றி தின உணவு தேவைகளுக்காகவும் பயன்பட்டு வருகிறது. சுத்தமான தேனிற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியாபார நோக்கத்திற்காகவே மட்டுமின்றி ஒரு பயனுள்ள பொழுது போக்காகவும் தேனீ வளர்ப்பு விளங்குகிறது.

தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், முதலாவதாகத் தேனீக்களைப் பற்றிய அறிவு மிகவும் அவசியம். தேனீக்களுக்கும் மற்ற வளர்ப்புப் பிராணிகளுக்கும், ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.  தேனீ வளர்க்க விரும்புவர்கள் தேனீக்களின் தன்மைகள், அவை வளரும் விதம், அவற்றின் வாழ்க்கை முறை, அவைகளைக் கையாளும் விதம், அவைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் அவைகளைத் தாக்கும் எதிரிகள், நோய்கள் ஆகியன பற்றி அவசியம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் தேனீக்களின் தேவையை அறிந்து உரிய நேரத்தில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள இயலும்.
தேனீக்களைப் பயமின்றியும், தன்னம்பிக்கையுடனும் பொறுமையாகவும், நிதானத்துடன், கையாளும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால், நாளடைவில் தேனீக்கள் கொட்டிவிடும் என்ற மன அச்சம் அகன்று விடும். தேனீப் பெட்டிகளை முறைப்படி அச்சமின்றி ஆய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கூட்டினுள் என்ன நடக்கின்றது என்பதைக் கண்டு அறிய முடியும்.
தேனீக்களைப் பற்றி புத்தகங்கள் படித்தும், இணைய தளங்களைப் பார்த்தும், பிறரிடமிருந்து கேட்டும் அறிந்து கொள்வதைவிட, நாமே வளர்த்துப் பார்த்துப் பெறும் அறிவு மிகச் சிறந்தது. இந்த அனுபவ அறிவே ஒருவரைத் தேனீ வளர்ப்புக் கலையில் சிறந்த வல்லுனராக்கும்.
தேனீ வளர்க்க விரும்புவோருக்குக் கூரிய கண் பார்வை மிகவும் அவசியம். அப்பொழுதுதான் அடை அறைகளில் இருக்கும் முட்டைகள், வளரும் புழுக்கள், ராணித் தேனீ மற்றும் செவ்வுண்ணி போன்ற உருவில் சிறிய தேனீக்களின் எதிரிகளையும் காண இயலும். குறைபாடுள்ள கண்களை உடையவர்கள் அவசியம் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்

தேனீ வளர்ப்பு நுட்பங்களை அனுபவம் மிக்க தேனீ வளர்ப்போரிடமிருந்தோ அல்லது தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் கலந்து கொண்டோ நன்கு அறிந்து கொள்ள இயலும்.

இந்தியத் தேனீ - ஓர் அறிமுகம்
தமிழகத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ இனம் இந்தியத் தேனீ இனமாகும். இவை மலைகளிலும் சமவெளிகளிலும் வாழவல்லவை. மழைவாழ் ரகத் தேனீக்களின் குணாதிசயங்கள் சமவெளி ரகத்திலிருந்து சற்று வேறுபடுகின்றன.

இந்தியத் தேனீயின் சிறப்பியல்புகள்
  • நாட்டுத் தேனீ இனம் என்பதனால் பலவிதச் சூழலிலும் வெற்றிகரமாக இயற்கையோடு இயைந்து வாழவல்லவை.
  • இருட்டில் வாழ்பவை.
  • பல அடைகளை அடுக்கடுக்காகவும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும் கட்டுகின்றன.
  • பொதுவாக சாந்த குணம் படைத்தவை.
  • சினமுற்ற தேனீக்களைப் புகை கொண்டு எளிதாகக் கட்டுப்படுத்த இயலும்.
  • கொட்டிய தேனீயில் கொடுக்கு முறிவு சில நேரங்களில் மட்டுமே ஏற்படும்.
  • கொட்டினால் ஏற்படும் வலி சற்று குறைவாக இருக்கும்.
  • கொட்டிய பின்னர் நேரடியாகப் பறக்காமல் சுற்றி வந்து உள் இறங்கிய கொடுக்கை விட்டு விடாமல் லாவகமாக விடுவித்துக் கொள்கின்றன
  • சட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்கள் சில நேரங்களில் அடையின் மேல் அங்குமிங்கும் ஓடும்
  • விசிறும் தேனீக்கள் இறக்கைகளைக் கொண்டு விசிறும் பொழுது வயிறு நுழைவு வழியைப் பார்த்த நிலையில் நின்று செயல்படுகின்றன
  • தேனீக் கூட்டத்தின் வளர்ச்சி சிறிய பெட்டிகளில் விரைவாக நடைபெறுகின்றது. புழு அறை பெரிதாக இருக்கும் தேன் அறைகளில் பணித் துவக்கம் தாமதமாகும்
  • கூட்டிற்குள் மகரந்த வரத்து வெகுவாகக் குறையும் பொழுது புழு வளர்ப்புப் பணி தடைப்பட்டுக் கூட்டம் ஓடி விடும்
  • இவை பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வாழ அடிக்கடி கூட்டை விட்டு ஓடி விடுகின்றன
  • இன விருத்திக்காக இவை அடிக்கடி குடி பெயர்ந்து செல்கின்றன. ஒரு கூட்டில் ஆண்டுக்கு 5 முதல் 6 முறை கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. இதனால் கூட்டத்தின் வலு பெரிதும் குறைகின்றது
  • ராணியற்ற கூட்டத்தில் பணித் தேனீக்களின் உடல் நிறம் சற்று கருமையாக மாறுகின்றது
  • ராணி இழப்பு நேரிட்ட கூட்டத்தில் ஒரு வாரத்தில் பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்குகின்றன
  • மதுர வரத்து காலங்களில் பழைய கறுத்த அடைகளைக் கடித்து புதுப்பிக்கின்றன
  • இவ்வாறு அடையைப் புதுப்பிக்கும் பொழுது அப்பலகையில் விழும் அடைத் துகள்கள் நீக்கப்படாது இருப்பதால் மெழுகுப் பூச்சியின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும்
  • ‘வரோவா’ உண்ணிகளைத் தாக்கியும் நீக்கியும் தங்களைக் காத்துக் கொள்ள வல்லவை
  • பச்சைக் குருவி, கருங்குருவி போன்ற பறவைகளின் பிடியில் எளிதில் சிக்காமல் லாவகமாக, வளைந்து, விழுந்து, எழுந்து, பறந்து தப்பிக்கின்றன
  • கூட்டை நெருங்கும் எதிரிகளைக் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சீறும் ஒலி எழுப்பி விரட்டுகின்றன
  • புழுக்கள் வைரஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன
  • உணவுச் செடிகள் குறைவாகவும், பரவலாகவும் உள்ள இடங்களிலும் இவை வாழவல்லவை
  • உணவு வரத்து குறையும் பொழுது அதற்குத் தக்கபடி தேனீக்களின் உற்பத்தியைக் குறைக்கின்றன. மேலும் அத்தகைய தருணத்தில் இடப்படும் எல்லா முட்டைகளும் தேனீக்களாக வளர்க்கப்படுவதில்லை. புரதத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களைத் தேனீக்களே உண்டு விடுகின்றன
  • குறைவான வெளிச்சம் இருக்கும் பொழுது வழி அறிந்து புலரும் பொழுதே வெளியில் சென்று உணவு திரட்டி வருகின்றன
  • விடியலுக்கு முன் துவங்கும் உணவு திரட்டும் பணி அந்தி சாயும் நேரம் வரையிலும் தொடர்கின்றது
  • பணித் தேனீக்கள் பிசின் சேகரிப்பது இல்லை
  • பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன
  • பணித் தேனீக்கள் மலரின்பால் கூடுதல் விசுவாசம் காட்டுகின்றன
  • வயல்வெளித் தேனீக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று உணவு திரட்டி வருகின்றன
  • வயல் வெளித் தேனீக்கள் ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லவை
  • உருவில் சற்று பெரியவை
  • உடல் நிறம் சற்று கூடுதலான கருமையுடன் இருக்கும்
  • பொதுவாக இவை அடைகளை நுழைவு வழிக்கு இணையாகவும் சில நேரங்களில் குறுக்காவும் கட்டும்
  • கொட்டும் தன்மை சற்று கூடுதலாக இருக்கும்
  • கடுங்குளிரிலும் செயலாற்ற வல்லவை
  • தேன் சேகரிக்கும் ஆற்றல் சற்று கூடுதலாக இருக்கும்
 நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Tuesday, 1 November 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301

தைலம் (மரம்)

சவுக்கு

வில்வம்
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
1.அக்கேசியா மரக் கன்றுகள்5.00
2.தைல மரக் கன்றுகள்4.00
3.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)4.00
4.அச்சா (ஹார்ட்விக்கியா பின்னேட்டா)5.00
5.பெருந்தகரை (லியூசீனா லியூக்காசெபலா)5.00
6.புளி (டாமரிண்டஸ் இண்டிகா)6.00
7.வில்வம் (ஈகிள் மார்மலஸ்)7.00
8.நாவல் (சைஜியம் கியுமினி)6.00
9.நெல்லி (எம்பிளிக்கா அபிசினாலிஸ்)6.00
10.பாதாம் (டெர்மினாலியா கட்டப்பா)6.00
11.கொடுக்காப்புளி (பிதிசெல்லோபியம் டல்ஸ்)6.00
12.அரநெல்லி (பில்லான்தஸ் அசிடஸ்)6.00
13.செம்மயிற்கொன்றை (டிலோநிக்ஸ் ரெஜியா)7.00
14.கொன்றை கொன்னை (காசியா) 7.00
15.தூங்குமூஞ்சி மழை மரம்(அல்பீசியா சமன்) 7.00
16.பட்டடி (ஸ்பத்தொடியா காம்பனுலேட்டா) 7.00
17.பெருங்கொன்றை (பெல்ட்டோபோரம் டீரோகார்ப்பம்) 7.00
18.பூவரசு (தெஸ் பீசியா பாபல்னியா) 7.00
19.சந்தன மரக்கன்றுகள் (சாண்டலம் ஆல்பம்) 20.00
20.தேக்கு (டேக்டோனா கிராண்டிஸ்) 6.00
21.நூக்கம் (டால்பர்ஜியா லேட்டிபோலியா)6.00
22.சிசூ (டி.சிசூ)10.00
23.சந்தன வேங்கை (டீரோகார்பஸ் சான்டலினஸ்)8.00
24.வேங்கை (டீரோகார்பஸ் மார்சுபியம்)7.00
25.வாகை (அ . லேப்பேக்)6.00
26.டேர்மினாலியா6.00
27.வேவாலா(லாகெர்ஸ்ட்ரீமியா லேன்சியாலேட்டா)6.00
28.மலை வேம்பு (மெலியா காம்போசிடா))10.00
29.வேம்பு (அசாரிடாக்டா இண்டிகா)6.00
30.புங்கம் (புன்கேமியா பின்னேட்டா)6.00
31.இலுப்பை (மதுக்கா லேட்டிபோலியா)6.00
32.காட்டாமணக்கு (ஜேட்ரோபா குர்கஸ்)6.00
33.சொர்க மரம் (சைமரூபா கிளௌக்கா) 6.00
34.புண்ணை மரம் (கேல்லோபில்லம் இமொபில்லம்) 6.00
35.அயிலை (ஆயிலான்தஸ் எக்செல்சா) 10.00
36.மலைக் கொன்றை (அக்ரோகார்பஸ் பிராக்ஸினிபோலியஸ்) 10.00
37.வெள்ளைக் கதம்பு (அந்தோசெபலஸ் கதம்பா) 10.00
38.இளவம் (செய்பா பெண்டான்ட்ரா) 5.00
39.மலை வேம்பு (மெலியா டுபியா) 8.00
40.மர வேம்பு (ச்விட்டோனியா மகோகனி) 10.00
41.குமிழ் (மெலினா ஆர்போரியா) 7.00
42.உரகுமஞ்சை (பிக்சா ஒரில்லானா) 6.00
43.குழாய் மூங்கில் (பாம்பூஸா பாம்போஸ்) 6.00
44.கல் மூங்கில் (மெலினா ஆர்போரியா) 6.00
45.மூங்கில்(பாம்பூசா வல்காரிஸ்) 12.00
46.தங்க மூங்கில் (பாம்பூசா ஸ்ட்ரிக்டா) 40.00
47.வாமின் மூங்கில்(பாம்பூசா வாமின்) 40.00
48.ராட்சத மூங்கில் (பாம்பூசா டேன்ரோ கெலாமஸ்) 60.00
விதைக் கரணை மற்றும் விதையில்லா பெருக்கம்
1.தைல மரக்கன்றுகள்50.00
2.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)50.00
3.இந்தோனேசியா சவுக்கு (கேசுவாரினா சுங்குநியானா)50.00
4.சிசூ (டால்பர்ஜியா சிசூ)10.00
5.தேக்கு டெக்டோனா கிரான்டிஸ் 10.00
6.காட்டாமணக்கு (ஜட்ரோபா குர்கஸ்) 50.00
7.புங்கம் ஓட்டுகள் (பொங்கோமியா பின்னேட்டா) 20.00
8.சொர்க மரம் (சைமறுபா க்களௌக்கா) ஓட்டுகள் 20.00
9.பூமருது (முளைத்த தண்டுத்துண்டுகள்) 10.00
10.மலை வேம்பு (மெலியா டுபியா) தண்டுத்துண்டுகள் 10.00
11.பாப்லர்(பாபுலஸ் டெல்டாய்டஸ்)தண்டுத்துண்டுகள் 10.00
12.மஞ்சள் கொன்றை (கேசியா சியாமியா) 10.00
13.பூவரசு (தெஸ்பீசியா பாபல்நியா)முளைத்த தண்டுத்துண்டுகள் 7.00
14.சீமைக் கொன்றை (15-30 செ.மீ)0.50
15.டுராண்டா 5.00
உயிர் உரங்கள்
1.நுண்ணுயிர் உயிர் உரங்கள் /கிலோ (அசாஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம்,அசடோபாக்டர், அசோபாஸ்). 40.00
2.வி.ஏ.எம் / கிலோ 30.00
3.மண்புழு /கிலோ 200.00
4.மண்புழு உரம்/கிலோ 6.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU

Saturday, 22 October 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம் - I I

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
21.நூக்கம் (டால்பர்ஜியா லேட்டிபோலியா)6.00
22.சிசூ (டி.சிசூ)10.00
23.சந்தன வேங்கை (டீரோகார்பஸ் சான்டலினஸ்)8.00
24.வேங்கை (டீரோகார்பஸ் மார்சுபியம்)7.00
25.வாகை (அ . லேப்பேக்)6.00
26.டேர்மினாலியா6.00
27.வேவாலா(லாகெர்ஸ்ட்ரீமியா லேன்சியாலேட்டா)6.00
28.மலை வேம்பு (மெலியா காம்போசிடா))10.00
29.வேம்பு (அசாரிடாக்டா இண்டிகா)6.00
30.புங்கம் (புன்கேமியா பின்னேட்டா)6.00
31.இலுப்பை (மதுக்கா லேட்டிபோலியா)6.00
32.காட்டாமணக்கு (ஜேட்ரோபா குர்கஸ்)6.00
33.சொர்க மரம் (சைமரூபா கிளௌக்கா) 6.00
34.புண்ணை மரம் (கேல்லோபில்லம் இமொபில்லம்) 6.00
35.அயிலை (ஆயிலான்தஸ் எக்செல்சா) 10.00
36.மலைக் கொன்றை (அக்ரோகார்பஸ் பிராக்ஸினிபோலியஸ்) 10.00
37.வெள்ளைக் கதம்பு (அந்தோசெபலஸ் கதம்பா) 10.00
38.இளவம் (செய்பா பெண்டான்ட்ரா) 5.00
39.மலை வேம்பு (மெலியா டுபியா) 8.00
40.மர வேம்பு (ச்விட்டோனியா மகோகனி) 10.00
41.குமிழ் (மெலினா ஆர்போரியா) 7.00
42.உரகுமஞ்சை (பிக்சா ஒரில்லானா) 6.00
43.குழாய் மூங்கில் (பாம்பூஸா பாம்போஸ்) 6.00
44.கல் மூங்கில் (மெலினா ஆர்போரியா) 6.00
45.மூங்கில்(பாம்பூசா வல்காரிஸ்) 12.00
46.தங்க மூங்கில் (பாம்பூசா ஸ்ட்ரிக்டா) 40.00
47.வாமின் மூங்கில்(பாம்பூசா வாமின்) 40.00
48.ராட்சத மூங்கில் (பாம்பூசா டேன்ரோ கெலாமஸ்) 60.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU
Link of Part-I of this Article

Friday, 21 October 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம் - I

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
1.அக்கேசியா மரக் கன்றுகள்5.00
2.தைல மரக் கன்றுகள்4.00
3.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)4.00
4.அச்சா (ஹார்ட்விக்கியா பின்னேட்டா)5.00
5.பெருந்தகரை (லியூசீனா லியூக்காசெபலா)5.00
6.புளி (டாமரிண்டஸ் இண்டிகா)6.00
7.வில்வம் (ஈகிள் மார்மலஸ்)7.00
8.நாவல் (சைஜியம் கியுமினி)6.00
9.நெல்லி (எம்பிளிக்கா அபிசினாலிஸ்)6.00
10.பாதாம் (டெர்மினாலியா கட்டப்பா)6.00
11.கொடுக்காப்புளி (பிதிசெல்லோபியம் டல்ஸ்)6.00
12.அரநெல்லி (பில்லான்தஸ் அசிடஸ்)6.00
13.செம்மயிற்கொன்றை (டிலோநிக்ஸ் ரெஜியா)7.00
14.கொன்றை கொன்னை (காசியா) 7.00
15.தூங்குமூஞ்சி மழை மரம்(அல்பீசியா சமன்) 7.00
16.பட்டடி (ஸ்பத்தொடியா காம்பனுலேட்டா) 7.00
17.பெருங்கொன்றை (பெல்ட்டோபோரம் டீரோகார்ப்பம்) 7.00
18.பூவரசு (தெஸ் பீசியா பாபல்னியா) 7.00
19.சந்தன மரக்கன்றுகள் (சாண்டலம் ஆல்பம்) 20.00
20.தேக்கு (டேக்டோனா கிராண்டிஸ்) 6.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU

Friday, 30 September 2016

தமிழ்நாட்டில் உள்ள உயிர் உர உற்பத்தி மையங்களின் பட்டியல்

வேளாண் நுண்ணுயிரியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
முனைவர். எஸ். அந்தோணிராஜ்
மதுரை – 625 104
(0452 – 422956 தொலைப்பிரதி: 422185
மின்னஞ்சல்: s_anthoniraj@yahoo.com
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண் துறை, 
தமிழ்நாடு அரசு
குண்டு சாலை வழி, சோமண்டலம்,
கடலூர் – 607001 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை, தமிழ்நாடு அரசு
வேளாண் வேதியியலர்,
சாக்கோட்டை,
தஞ்சாவூர் – 612 401 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை,
தமிழ்நாடு அரசு
ஜமால் முகமது கல்லூரி அஞ்சல், காஜாமலை,
திருச்சி – 620 020 (தமிழ்நாடு)
கிரிபிகோ
சிட்கோ கார்மெண்ட் வளாகம், திரு. வி. க. தொழிற்சாலை பகுதி,
கிண்டி, சென்னை – 32
மண்டல ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
பையூர் – 635 112
காவேரிப்பட்டிணம் வழி,
தர்மபுரி மாவட்டம் (04343 – 50043)
மோனார்க் உயிர் உரங்கள் மற்றும் ஆராய்ச்சி மையம்,
12, சிட்கோ தொழிற்சாலை பகுதி, திருமாழிசை,
சென்னை – 602 107 (தமிழ்நாடு)
(6272780)
லட்சுமி உயிர் தொழில் நுட்பம்
திரு. வி. சித்தானந்தம்,
நெல்லிக்குப்பம் சாலை, தொட்டபட்டு,
கடலூர் – 607 109 (தமிழ்நாடு)
(04142 – 210136)
மேரிக்ரீன் அப்போடெக் பிரைவேட் லிமிடெட்
முனைவர். Y. ஜோ
5 / 302, ஸ்ரீ சாய்பாபா தெரு, சந்தோஷ் நகர், கண்டன்சாவடி, பெருங்குடி அஞ்சல்,
சென்னை – 600 096 (தமிழ்நாடு)
4964202, 3735957
மின்னஞ்சல்: marygreen45@hotmail.com
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண் நுண்ணுயிரியல் துறை,
கோயமுத்தூர் – 3 (தமிழ்நாடு)
431222 விரிவு, 294
தொலைப்பிரதி: 0422 – 431672
மின்னஞ்சல்: vctnau@vsnl.com
டி. ஸ்டேன்ஸ் & கம்பெனி லிமிடெட்
முனைவர். எஸ். ராமரத்தினம்
8 / 23 – 24, ரேஸ்கோர்ஸ் சாலை,
கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு)
(0422 – 211514, 213545)
தொலைபிரதி: 217432
மின்னஞ்சல்: tsstanes@vsnl.com 
எஸ்வின் உயர்தர தொழில்நுட்பங்கள் லிமிடெட்,
திரு. டி. எஸ். வெங்கட்ராமன்
“எஸ்வின் இல்லம்” பெருங்குடி,
சென்னை – 600096 (தமிழ்நாடு)
(4961056, 460690, தொலைப்பிரதி: 4961002)
மின்னஞ்சல்: tsv@vsnl.com
சதா்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்டிரிஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்,
திரு. கே. ராஜீ
ஸ்பிக் லிமிடெட் உயிர் தொழில்நுட்ப பிரிவு, செட்டியார் அகரம் சாலை, காந்தி நகர், போரூர்,
சென்னை – 600 116 (தமிழ்நாடு)
44 – 4768064
தொலைப்பிரதி: 044 – 4767347
மின்னஞ்சல்: biotech.por@spic.co.in
உயிர் உரப்பிரிவு, மணலி, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்,
திரு. பி. மல்லிகார்ஜீனா ரெட்டி,
முதன்மை மேலாளர் உயிர் பொருட்கள்
வர்த்தகக் குழு, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், மணலி,
சென்னை – 600068 (தமிழ்நாடு)
044 – 5941001 விரிவு, 2750
தொலைப்பிரதி: 5741010
மின்னஞ்சல்: edcomm@mfi.tn.nic.in
உயிர் உர உற்பத்தி மையம்,
திரு. எஸ். முருகன்,
வேளாண் வேதியியலர், உயிர் உர உற்பத்தி பிரிவு, சீலநாயக்கன்பட்டி,
சேலம் – 636 201 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம்,
திரு. பி. ராமன்,
வேளாண் வேதியியலர்,
உயிர் உர உற்பத்தி பிரிவு,
குடுமியான் மலை – 622 104
புதுக்கோட்டை மாவட்டம்
முக்கிய உயிர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம்,
(தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை பேரவையின் பிரிவு)
2ஈ / 1, ராஜேஸ்வரி வேதாச்சலம் தெரு,
செங்கல்பட்டு – 603001 (தமிழ்நாடு)
(04114 – 431393)
சையா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம்,
முனைவர். எம். ஏ. சண்முகம்,
“சண்முக மன்றம்”, அஞ்சல் பெட்டி எண்: 3871,
ரேஸ்கோர்ஸ்,
கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு)
(0422 – 211391, தொலைப்பிரதி: 0422 – 216798)
 

நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக இணையதளம்