Friday 30 September 2016

தமிழ்நாட்டில் உள்ள உயிர் உர உற்பத்தி மையங்களின் பட்டியல்

வேளாண் நுண்ணுயிரியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
முனைவர். எஸ். அந்தோணிராஜ்
மதுரை – 625 104
(0452 – 422956 தொலைப்பிரதி: 422185
மின்னஞ்சல்: s_anthoniraj@yahoo.com
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண் துறை, 
தமிழ்நாடு அரசு
குண்டு சாலை வழி, சோமண்டலம்,
கடலூர் – 607001 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை, தமிழ்நாடு அரசு
வேளாண் வேதியியலர்,
சாக்கோட்டை,
தஞ்சாவூர் – 612 401 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை,
தமிழ்நாடு அரசு
ஜமால் முகமது கல்லூரி அஞ்சல், காஜாமலை,
திருச்சி – 620 020 (தமிழ்நாடு)
கிரிபிகோ
சிட்கோ கார்மெண்ட் வளாகம், திரு. வி. க. தொழிற்சாலை பகுதி,
கிண்டி, சென்னை – 32
மண்டல ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
பையூர் – 635 112
காவேரிப்பட்டிணம் வழி,
தர்மபுரி மாவட்டம் (04343 – 50043)
மோனார்க் உயிர் உரங்கள் மற்றும் ஆராய்ச்சி மையம்,
12, சிட்கோ தொழிற்சாலை பகுதி, திருமாழிசை,
சென்னை – 602 107 (தமிழ்நாடு)
(6272780)
லட்சுமி உயிர் தொழில் நுட்பம்
திரு. வி. சித்தானந்தம்,
நெல்லிக்குப்பம் சாலை, தொட்டபட்டு,
கடலூர் – 607 109 (தமிழ்நாடு)
(04142 – 210136)
மேரிக்ரீன் அப்போடெக் பிரைவேட் லிமிடெட்
முனைவர். Y. ஜோ
5 / 302, ஸ்ரீ சாய்பாபா தெரு, சந்தோஷ் நகர், கண்டன்சாவடி, பெருங்குடி அஞ்சல்,
சென்னை – 600 096 (தமிழ்நாடு)
4964202, 3735957
மின்னஞ்சல்: marygreen45@hotmail.com
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண் நுண்ணுயிரியல் துறை,
கோயமுத்தூர் – 3 (தமிழ்நாடு)
431222 விரிவு, 294
தொலைப்பிரதி: 0422 – 431672
மின்னஞ்சல்: vctnau@vsnl.com
டி. ஸ்டேன்ஸ் & கம்பெனி லிமிடெட்
முனைவர். எஸ். ராமரத்தினம்
8 / 23 – 24, ரேஸ்கோர்ஸ் சாலை,
கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு)
(0422 – 211514, 213545)
தொலைபிரதி: 217432
மின்னஞ்சல்: tsstanes@vsnl.com 
எஸ்வின் உயர்தர தொழில்நுட்பங்கள் லிமிடெட்,
திரு. டி. எஸ். வெங்கட்ராமன்
“எஸ்வின் இல்லம்” பெருங்குடி,
சென்னை – 600096 (தமிழ்நாடு)
(4961056, 460690, தொலைப்பிரதி: 4961002)
மின்னஞ்சல்: tsv@vsnl.com
சதா்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்டிரிஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்,
திரு. கே. ராஜீ
ஸ்பிக் லிமிடெட் உயிர் தொழில்நுட்ப பிரிவு, செட்டியார் அகரம் சாலை, காந்தி நகர், போரூர்,
சென்னை – 600 116 (தமிழ்நாடு)
44 – 4768064
தொலைப்பிரதி: 044 – 4767347
மின்னஞ்சல்: biotech.por@spic.co.in
உயிர் உரப்பிரிவு, மணலி, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்,
திரு. பி. மல்லிகார்ஜீனா ரெட்டி,
முதன்மை மேலாளர் உயிர் பொருட்கள்
வர்த்தகக் குழு, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், மணலி,
சென்னை – 600068 (தமிழ்நாடு)
044 – 5941001 விரிவு, 2750
தொலைப்பிரதி: 5741010
மின்னஞ்சல்: edcomm@mfi.tn.nic.in
உயிர் உர உற்பத்தி மையம்,
திரு. எஸ். முருகன்,
வேளாண் வேதியியலர், உயிர் உர உற்பத்தி பிரிவு, சீலநாயக்கன்பட்டி,
சேலம் – 636 201 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம்,
திரு. பி. ராமன்,
வேளாண் வேதியியலர்,
உயிர் உர உற்பத்தி பிரிவு,
குடுமியான் மலை – 622 104
புதுக்கோட்டை மாவட்டம்
முக்கிய உயிர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம்,
(தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை பேரவையின் பிரிவு)
2ஈ / 1, ராஜேஸ்வரி வேதாச்சலம் தெரு,
செங்கல்பட்டு – 603001 (தமிழ்நாடு)
(04114 – 431393)
சையா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம்,
முனைவர். எம். ஏ. சண்முகம்,
“சண்முக மன்றம்”, அஞ்சல் பெட்டி எண்: 3871,
ரேஸ்கோர்ஸ்,
கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு)
(0422 – 211391, தொலைப்பிரதி: 0422 – 216798)
 

நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக இணையதளம்

Thursday 29 September 2016

உயிர் உரம் : அசோலா

அசோலா (ஆங்கிலம் : Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. 

இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது.

அமைப்பு
Image courtesy : The hindu
மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது.மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும்.இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

அசோலா வளர்ப்பது எப்படி?


முதலில் 5-க்கு 6 அடி நீளமும், 3-க்கு 4 அடி அகலமும் ஒன்று முதல் 1½ அடி வரை ஆழமும் கொண்ட குழிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் பேப்பர், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூளைத் தூவ வேண்டும்.


நாட்டுப் பசுஞ் சாணம் ஒன்று முதல் 2 கிலோவரை, வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு, சுமார் ½ அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும். தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார் ½ முதல் 1 கிலோ வரை அசோலா விதைகளைத் தூவ வேண்டும். 10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும்.


இதிலிருந்து தினமும் ½ கிலோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை ஒரு கிலோ நாட்டுப் பசுஞ் சாணம், ஒரு கைப்பிடி ஆழ்துளைக் கிணறு மண் அல்லது பாறை மண் போட வேண்டும். அத்துடன் மாதத்துக்கு ஒரு முறை அடி மண்ணைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, புது மண் போட வேண்டும். தண்ணீரின் அளவு 7 முதல் 10 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைப் பாதி அளவுக்கு வெளியேற்றிப் புது நீரை மாற்ற வேண்டும். 6 மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலா அறுவடை செய்யலாம். அதிவேகமாக வளரும் தன்மை கொண்ட காரணத்தால், தினமும் அசோலாவை எடுத்துக்கொண்டு புதிதாக வளர்வதற்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போக விட்டுவிடக் கூடாது.


அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும். 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு செழித்து வளரும். கடுமையான பகல் நேர வெயில் நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது.

நெல் வயலில் அசோலா


நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். அசோலாவை மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம். நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் 10 நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும். நாற்று நடவு செய்த 7ம் நாள் வயலில் அசோலாவை 5 கிலோ தூவ வேண்டும். இதற்கு அளவு கிடையாது. 

பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக்  கொண்டு அசோலா வேகமாக வளரும். நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும். 20ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம். நிலம் முழுவதும் படர்ந்து விடுவதால், களை கட்டுப்படுகிறது. சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும். இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10% முதல் 20% கூடுதல் மகசூல் கிடைக்கும்.


தீவனம்


மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. அசோலாவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரமாக விளங்குகிறது. மேலும் தாது உப்புக்கள் 10% முதல் 15% வரையும் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்), வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அசோலாவின் பயன்பாடுகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

உரச்செலவு 30% குறைவு


அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது, நீர் ஆவியாவது குறைகிறது. அசோலா,  காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன  முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு  குறைகிறது. 

நன்றி

Sunday 25 September 2016

அசோஸ்பைரிலம்

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.

வளிமண்டலத்தில் மிக அதிகமாக உள்ள (78%) நைட்ரஜன் (N) வாயுவை நிலைப்படுத்தி அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றித் தாவரங்களுக்கு அளிக்கும் வேலையைச் செய்பவையே உயிர் உரங்கள் என்று அழைக்கப்படும். உம். பாசி மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, அசட்டோ பாக்டர், அனபினா, நாஸ்டாக்  மற்றும் வேர்முடிச்சு (வேர்முண்டுகள்) பாக்டீரியமான ரைசோபியம். அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ் ஆகியவை நெல் போன்ற பயிர்களுக்கு உயிர் உரமாகத் தரப்படுகிறது. ரைசோபியம் அவரை, உளுந்து  குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது. 

அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

Image courtesy : wikipedia
அசோஸ்பைரிலம் நுண்ணுயிர் ஒரு பாக்டீரியா வகையைச் சேர்ந்தது. இது வளர்வதற்கு மிகக்குறைந்த அளவு காற்று போதுமா னது. காற்றில் உள்ள தழைச் சத்தை உட்கிரகித்து பயிர்களுக்கு வழங்குகிறது. நெல் மற்றும் பிற தானியப் பயிர் களின் வேர் மண்டலத்தில் இணைந்து வாழும் நுண்ணு யிர் இதுவாகும்.அசோஸ்பைரிலம் நுண் ணுயிரியை நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, பனி வரகு, தினை, சாமை, குதி ரை வாலி போன்ற தானியப் பயிர்களுக்கும், பருத்தி, சூரியகாந்தி மற்றும் கரும்பு போன்ற இதர பயிர்களுக் கும் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி செய்ய ஒரு பொட்டலமும் (200 கிராம்) நாற்று விட்டு நடவு செய்யும் பயிர்களுக்கு நாற் றின் வேர்களை நனைக்க இரண்டு பொட்டலமும் (400 கிராம்), நடவு வயல் அல்லது நேரடி விதைப்பு செய்யும் நிலத்திற்கு ஏக்க ருக்கு 4 பொட்டலமும் (800 கிராம்) பயன்படுத்த வேண்டும்.

தாவர வளர்ச்சி ஊக்கிகளை வேர் மண்டலத்தில் உண்டாக்கு வதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பயிர் களின் மகசூல் அதிகரிப்பதுடன் மண்வளம் பாதுகாக் கப்படுகிறது”.





நன்றி : தினகரன்

நன்றி : தீக்கதிர்

courtesy : Google Groups


Friday 16 September 2016

மார்கழிப் பட்ட கேழ்வரகு!

திருநெல்வேலி: தமிழ்நாடு வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் தானிய வகைப் பயிர்களில் மார்கழிப் பட்டமாக கேழ்வரகு பயிரிட்டு லாபம் பெறலாம்.

ரகம், பருவம்: தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம்.

மார்கழிப் பட்டம்: டிசம்பர் - ஜனவரி மாதங்களான மார்கழிப் பட்டத்தில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1 ரகங்களைப் பயிரிடலாம்.

சித்திரைப் பட்டம்: ஏப்ரல் - மே மாதங்களில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம்.

மானாவாரியாக ஆடிப் பட்டத்தில் (ஜூன் - ஜூலை) பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ14, பையூர் 2 ரகங்களைப் பயிரிடலாம்.

புரட்டாசிப் பட்டம்: செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பையூர் 1, கோ13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம்.

நாற்றங்கால் தயாரித்தல் (நாற்றங்கால் பாசனம்): ஒரு ஹெக்டேர் வயலில் நடவுக்குத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500 மீ) நாற்றங்கால் பரப்பு தேவை. 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழுஉரம் கலந்து நாற்றங்கால் பாத்திகளில் சீராகப் பரப்ப வேண்டும். இறக்கை கலப்பையால் 2 அல்லது 3 முறையோ, நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழ வேண்டும்.

மேட்டுப்பாத்தி தயாரித்தல்: 3 மீ-க்கு 1.5 மீட்டர் அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ. இடைவெளி அவசியம். இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ. ஆழத்துக்கு தோண்டி வாய்க்கால் அமைக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்த வேண்டும்.

காளான் கொல்லி முன்விதை நேர்த்தி: அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் ஒரு ஹெக்டேருக்கு, 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்: விரலால் படுக்கையின் மீது கோடிட வேண்டும். அதன் மீது விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைத் தூவ வேண்டும். கையால் மண்ணைத் தூவி விதைகளை மூட வேண்டும். 500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் தூவிவிட்டு விதைகளை மூடி மேற்பரப்பை இளக்கமாக்க வேண்டும். ஆழமாக விதைத்தால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

நீர் மேலாண்மை: ஒவ்வொரு நாற்றங்காலுக்கும் ஓர் உள்வாயில் அமைக்க வேண்டும். உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும். மேட்டுப்பாத்திகள் ஈரமாகும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிட வேண்டும். மண்ணின் வகையைப் பொருத்து நீர்ப்பாசன இடைவெளி மாறுபடும். செம்மண்ணுக்கு 3ஆவது நாள் நீர்ப் பாய்ச்சி கடின மேற்பரப்பு லகுவாக்கப்படுகிறது. இதனால் நாற்றுகள் எளிதாக முளைக்கும். முறையாக, சீராக நீர்ப் பாய்ச்சி நாற்றங்கால் பாத்தியில் பிளவு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாற்றுகளைப் பிடுங்கி நடுதல்: விதைத்த 17 அல்லது 20ஆவது நாளில் நாற்றுகளை, நடவுக்காக பிடுங்கலாம்.

நடவு வயலை தயார் செய்தல்: மண் நன்றாக கட்டிகளின்றி உடையும் வரை அச்சுக் கலப்பையால் 2 முறையும், மரக் கலப்பையால் 3 முறையும் உழ வேண்டும்.

உரம் அல்லது தொழுவுரம் இடுதல்: ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மக்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பையால் உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும். உரங்களை வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள் வீணாகும்.

உரப் பயன்பாடு: மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி உரங்கள் அளிப்பதால் பயிர் விளைச்சலில் இலக்கை அடையலாம். முடிந்தவரை மண் பரிசோதனைப்படி தழை, மணி, சாம்பல் சத்துகளை மண்ணுக்கு அளிக்க வேண்டும். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு இட வேண்டும். நடவுக்கு முன் தழைச்சத்தில் பாதியளவும் சாம்பல்சத்தில் பாதியளவும் மணிச்சத்து முழுவதையும் சேர்த்து அடியுரமாக இட வேண்டும். உரக் கலவையை கடைசி உழவுக்கு முன் மண்ணில் இட்டு நாட்டுக் கலப்பையால் உழுது மண்ணுடன் உரக் கலவையை ஒன்றிணைக்க வேண்டும்.

படுக்கை, வாய்க்கால்: 10 ச.மீ-க்கு 20 ச.மீ என்ற அளவில் படுக்கை அமைத்தல் வேண்டும். மேலும், தேவையான அளவுக்கு பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும்.

நுண்ணூட்டக் கலவை: தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தல்படி 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையுடன் போதுமான மண் கலந்து அதை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் அளிக்க வேண்டும். நுண்ணூட்டக்கலவையை பாத்திகளின் மீது சமமாக இட வேண்டும். கலவையை மண்ணில் இட்டு கலக்கக் கூடாது.

நாற்று நடுதல்: படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும். ஒரு குத்துக்கு 2 நாற்றுகளாக நட வேண்டும். நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். 18 முதல் 20 நாள் நாற்றுகளை நட வேண்டும்

30-க்கு 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். நேரடி விதைப்பாக இருந்தால் 22.5-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க வேண்டும். நாற்று நடும் முன் இந்தக் குழம்பில் 15 முதல் 30 நிமிடம் நனைக்க வேண்டும்.

களை நிர்வாகம்: விதைத்த 3 நாள்களுக்கு பிறகு களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்கவும். விதைத்த 20 நாள்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருந்தால் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10, 20 நாள்களில் இருமுறை கையால் களையெடுக்கவும். வழிகாட்டுதல்படி நீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

Image courtesy : Wikipedia
அறுவடை: கேழ்வரகுப் பயிர் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை. எனவே, இருமுறையாக அறுவடை செய்ய வேண்டும். 50 சதவீத கதிர்கள் பழுப்பு நிறமடைந்தபிறகு அதை அறுவடை செய்யலாம்.

முதல் அறுவடை: முற்றிப் பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும். தானியத்தைக் காயவைத்து கதிரடித்து தூற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

2ஆம் அறுவடை: முதல் அறுவடைக்குப் பிறகு 7ஆவது நாளில் அனைத்து தானியக் கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒருநாள் வைப்பதால் வெப்பநிலை அதிகரித்து தானியம் தரமாகும். உலர்ந்த தானியத்தைக் கதிரடித்து புடைத்து, சுத்தப்படுத்தி சாக்குப் பைகளில் சேமிக்க வேண்டும்.

நன்றி : தினமணி

Monday 12 September 2016

Amudham Solutions

Amudham Solutions
This solution acts right away as a catalyst for growth.  With very little work we can create this solution within twenty four hours.

Ingredients: 1 liter cattle urine, 1 kg dung, 250 grams jiggery in 10 liters water.

Preparation:  Mix the dung thoroughly in water.  Add urine and mix well.  Powder the jiggery, add to the above, and mix well.  Make sure that are no lumps and cover and set aside the mixture for 24 hours.

Usage:  Add one liter of this solution to ten liters water (for a 10% solution) and spray.  You must make sure to dilute the solution or else the leaves will get scorched.
This solution helps growth of leaves directly.  It also repels insects.  Instead of using jiggery, you may use waste fruit in this manner: Tie one kilogram waste fruit into a nylon bag and immerse this in urine solution.  Let it soak for five days.  This helps the fruit ferment well.  Add ten times water to this and spray or add 60-100 liters of in irrigation water for one acre.

Concentrated Amudham Solution

Ingredients:  5 liters cattle urine, 1 kg dung, 1 liter juice of any waste fruit.

Preparation: Mix the dung thoroughly in urine and the juice and mix well.  Set aside the mixture for five days.  

This helps us avoid the usage of jiggery, which is an external input.  

Usage:  This can only be used for irrigation and not for spraying.  Use 20-30 liters per acre of this solution.  This solution gives excellent growth.  

Note:  Earlier we used the (ordinary) Amudham solution in irrigation.  But we need to use 50-100liters per acre.  To reduce the quantity and work we developed this combination.  It is essential that farmers thus develop simple processes.  


Courtesy : TNAU

A Video from youtube

Saturday 10 September 2016

இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்!

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி. தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார். தமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார்; திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். கடல்வாழ் உயிரினப் படிப்பில் இந்தியாவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் 1981-ல் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரைக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1975-ல் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த அவர் அன்று முதல் இன்றுவரை காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மரம் நடுதல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

Image & Article courtesy : The Hindu
பணி நிறைவு பெற்றுவிட்ட பிறகும் விஜயலட்சுமி ஓய்வாக அமரவில்லை. இப்போதும் அதே சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார். “பராசக்தி கல்லூரியில் கிடைத்த ஊக்கத்தால் கழிவுப் பொருள்கள் உதவியுடன் காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் அவர், 1962-லேயே இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்லூரி அளவில் பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அப்போது அமைத்த சாண எரிவாயு அமைப்பு இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்.

பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பிலிருந்து கிடைத்த கழிவுப் பொருள்கள் மூலம் மீன் வளர்த்திருக்கிறார். சாதாரண நீரில் மீன் வளர்ப்பதைவிட இந்தக் கழிவுப் பொருள் நீரில் மீன் வளர்ப்பதால் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் மீன் உணவான மிதவை உயிரிகள் மிகவும் விரைவாக உற்பத்தியாகிவிடும் என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மீன் வளர்ப்பில் கிடைத்த உற்சாகத்தால் கழிவு நீரில் காளான் வளர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

“செயற்கையாகக் காளான் வளர்க்கலாம் என்னும் உத்தி இப்போது நன்கு பரவி திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே இந்தக் காளான் வளர்ப்பு பலன் தரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் விஜயலட்சுமி. தென்காசி அருகே இருக்கும் வல்லம் கிராமத்தை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

1980-ல் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, அவர் சந்தித்த பல்கலைக்கழக டீன் கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வைக்கோல் கழிவிலிருந்து மண்புழுவை வளர்க்கலாம் என்ற திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் பேராசிரியர் விஜயலட்சுமிக்கு உந்துதலாக இருந்துள்ளது. ‘மண் புழு மண்ணிலேயே இருக்கிறதே அதை ஏன் செயற்கையாக வளர்க்க வேண்டும்?’ என விஜயலட்சுமி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி, ‘நீங்கள் நினைப்பது போல் அல்ல, இப்போதெல்லாம் மண்ணைத் தோண்டினால் மண்தான் வரும், மண்புழு வராது’ என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதில்தான் மண்புழு வளர்ப்பை நோக்கி விஜயலட்சுமியைத் திருப்பியது. மண்புழு வளர்ப்பு தொடர்பாக பெங்களூர் விவசாயக் கல்லூரியில் பணியாற்றிய முனைவர் ராதா அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இயற்கையான எல்லாக் கழிவுகளிலும் மண்புழுவை வளர்க்கலாம் என முனைவர் ராதா தெரிவித்துள்ளார்.

“இந்திய மண்புழு, ஆப்பிரிக்க மண்புழு, சீன மண்புழு ஆகிய மூன்று வகைகளை நான் வளர்த்திருக்கிறேன். சீன மண்புழுவையும், ஆப்பிரிக்க மண்புழுவையும் வளர்க்க மண்ணே தேவையில்லை, வெறும் இலையிலும் கழிவுகளிலுமே அவை வளரும்” என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மேலும், “சீன மண்புழு ஒன்றரை அங்குலம் நீளமே இருக்கும். எனவே அதிக இடம்கூடத் தேவையில்லை. இலை, தழைகளை மட்டுமே அவை சாப்பிடும். தினசரி சாணிப்பால் மட்டும் தெளிக்க வேண்டும். நாற்பத்தி ஐந்து நாட்களில் உரம் தயாராகிவிடும்” என்கிறார் அவர்.

இப்போதும் குற்றாலம் அருகே இருக்கும் தனது வீட்டின் அருகே செயல் விளக்கம் செய்து காட்டுவதற்காக மண்புழு உரக் கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது செயல் விளக்கப் பயிற்சியின் மூலம் சிறு சிறு தொழிற்சாலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் கழிவுப் பொருளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மண்புழு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார்.

“மண்புழு உரம், மற்ற உரங்களைவிட சிறப்பானது. தீங்கிழைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மண்புழு உரத்தை நெருங்காது. ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் போதுமானது. இதனுடன் மேல் உரம், அடி உரம் போட்டால் போதும்” என்று சொல்லும் விஜயலட்சுமி, மண்புழு உரத் தயாரிப்பை லாப நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.

நன்றி : தி இந்து

Let us come forward to fulfill the dreams of Gandhi ji

Image courtesy : wikipedia

Today if Gandhi ji would have been alive then he would be the first person to stop the control on our natural resources from the hands of multinationals companies. Bapu ji chose Charkha; the symbol of self-reliance to fight against the East India Company. The large chunk of the hard efforts done by the Indian community was going to Manchester in form of foreign clothing. Hundred years back Gandhi ji was born to protest and fight against the injustice. In South Africa he first protested through Satyagarh against the racism existing there from the Railway Station, where he was thrown out of the first class coach even though carrying the first class ticket with him just because he was a black and the first class coach was supposed to be only for white people to travel. He fought against the racism existing there for 20 years and came to Indian being a victory. Back in India he started movement against the Neel ki Kheti through which the Indian farmers were being exploited. Even while fighting against these social injustices, he was always finding ways to change and to become free from the attitude of dependence. During the search to get freedom he found Charkha to be the simplest way to achieve this.


Bapu identified Charkha as the symbol of revolution just because it signifies against the mechanized and centralized profiteering based economy through decentralization and self-reliant productive process. Charkha was not only symbolizing the ends but also the means in the status of economy at that time. That is why he took Charkha as a tool to fight against the system to create a change through revolution. Charkha was the symbol for society building signifying hardworking, non-violence, and injustice free society. This was a strong tool to defy the domination of dependence from the Britishers. 

Today natural resources such as water, forest and land which are the basis of life, everything is slipping from the hands of the society and the most loot is going through the commercialization and marketeering of the water and in coming five years the ground is being prepared to send the large chunk of the earnings of India to west. Bapu would have reacted sharply, when he would have got the essence of this game plan. He would have immediately started the movement against it. To protest against the injustice he would have not only relied upon the speeches but could have thought of evolving something constructive like Charkha and constructive solution of this crisis have simple answers i.e. dig pond.


In construction of ponds there is no need to have money from any company, the society in itself with their local wisdom and knowledge and most important is with their voluntary contributions they could build ponds. The process of building a pond starts from uniting the community, making them come together in the same platform. Society by belongingness, togetherness among them only makes initiate building ponds. And the water, which is stored in the pond helps in checking soil erosion thereby minimising the ill effects being done against the environment. 

Ponds provide water not only to human beings i.e. poorest of the poor but also to the animals that to free of cost. It also fulfills the emptied earth. Recharges the wells and this whole works makes the society water self-sufficient and a feeling of pride. The way Charkha makes society self-dependent through the hard work and brings prosperity. Ponds keep alive the poorest of the poor without having been paid a single pie. Through ponds only we can stop the marketing of bottled water, which is exploiting common man. When we have a pond in the village filled with fresh water, then on roads automatically there would be water pots, as pond is the source of emergence of water pot. When we will have water pots at every places such as Bus stand and Railway stations, then nobody will buy water. Pond gives water to everybody. It gives life and move ahead without making anything from anybody in return just because of the hard efforts and feelings of the society put behind it.


We can take inspiration for building ponds from Gandhi ji's Charkha. It took so much time and efforts for Gandhi ji to discover Charkha because till then the foreign clothes engulfed Charkha. Now ponds are getting extinct but from Kanyakumari to Kashmir and from Guwahti to Gujarat still few ponds exist. In villages of Chattisgarh, Orissa, Rajasthan and Gujarat the ponds significance is still prevalent. In villages there is no other life saving support except the pond. Most of the villages are alive only due to the presence of pond. The fate of these villages will remain alive just being near the pond even without money. When Gandhi ji choose Charkha at that time, the significance of Charkha was same that of ponds today. But 100 years back there was no threat for water loot on the head of the society. Water was easily available everywhere. Even if you have to go far away to get water, you would get it free.


On April 1st 2003, the day when New Water Policy was declared for the country, if Bapu would have been alive then protect the existence, purity and culture of pond he would have started a satyagrah. Because water is common natural resource the basis of life. How could any Government can ever think of giving the control of all these natural resources to a company or an individual? But Gandhi ji would have initiated a Satyagrah against this big fraud being committed in the country against our society since independence.


Water is not been created by any Government. This is the common natural resource of Society and Nature. It has to be saved through Joint efforts; he would have joined with the community to dig soil from the pond with spade. Pond signifies voluntary efforts, the way Charkha is. There is no difference in the nature of both Charkha and pond. Both inspire the society and maintain the dignity to get for real hard work and earn their breads with their own hands.


Charkha runs by the hard efforts. Pond also can be build by volunteer efforts. The thread prepared by Charkha interlinks several constituents of the society while in the process of making clothes from it. Same way the pond also integrate the different sections of the society during the building process. This is the common activity fulfilling the common needs of the society that to with so less expenditure. It gives message to the society towards self-reliance and to return back to the earth, through our hard efforts what we extract from it. A pond acts as a feeder towards the environment.


Ponds have being the life and blood of our society and culture. Society also use to perform volunteer work on Amavashya (no moon day) and Poornima (full moon day) to build ponds. These two days were kept for doing common activities in a village for fulfillment of common needs of everybody. Today this tradition is on the verge of extinction. Bapu would have mobilised the society to revive this tradition. He was a century's man. For each work he would tell he is not doing anything new but he is just reviving the good traditions and good would present in the society, which we are leaving behind and society should stand up to do it.

Bapu in his own time has prepared a brigade of volunteers to do some constructive work, they would have encouraged saving and conserving of water through building of ponds. Today there is a big challenge among the workers of Gandhi ji to stop the privatisation and commercialisation of water, which is a life truth. By accepting this challenge where ever such work will start there the crisis of communalism and capitalism will stop automatically. Our country will generate feelings to stand upon own its own feet and become self-reliant. This will be the only way to give a true tribute to Gandhi ji and to rejuvenate the Charkha in the 21st Century.


The enthusiasm, which Charkha had during the independence movement, same zeal today ponds will produce right now. So, to have rights of environment and society over water, we should start building ponds. Ponds will fulfill the dreams of Gandhi ji's Swaraj. It will stop dependency on other factors for irrigation and bottled drinking water. Help in establishing the common rights of everybody. So, we all should come forward to fulfill the dream of Gandhi ji's dream of Swaraj by building of ponds.

-By Tarun Bharat Singh

Re-produced from the PDF content available at http://tarunbharatsangh.in

புரதச் சுரங்கம் : பருப்பு

நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள்.

Image & Article courtesy : The Hindu
குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி).
அதேபோலத் தமிழகத்தில் சாம்பார், கேரளத்தில் புட்டு மற்றும் ஆப்பத்துடன் வரும் கடலைக்கறி, வடஇந்தியாவில் சப்பாத்தியுடன் வரும் தால் எனப்படும் பருப்பு மசியல் எனப் பருப்பு இல்லாமல் இந்திய உணவைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. பருப்பு வகைத் தாவரங்கள் நம் தினசரி உணவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

எளிமையின் உச்சம்
மாவுச் சத்து, புரதச் சத்து, (நல்ல) கொழுப்புச் சத்து, வைட்டமின், கனிமச்சத்து போன்றவை கலந்த சதவிகித உணவு ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படைத் தேவை. இதில் விலங்குப் புரதத்தைச் சாப்பிடாதவர்கள், தாவரப் புரதத்துக்குப் பருப்பு வகைகளையே நம்பியிருக் கிறார்கள். தமிழகத்திலும் இந்தியாவிலும் புரதச் சத்துத் தேவையைப் பெருமளவு நிறைவு செய்வது பருப்பு வகைகள்தான்.

பருப்பு வகைகளின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், முக்கியமான சிறப்புகள்: இவற்றைச் சமைப்பது எளிது, அதேநேரம் உடலுக்குப் பெரிய தீங்கு செய்வதில்லை. வயலில் இவற்றை விளைவிப்பதும் மிகக் கஷ்டமானதோ அதிகப்படி தண்ணீரை உறிஞ்சுவதோ இல்லை.

எப்படி வருகிறது?
ஆங்கிலத்திலோ, லத்தீனிலோ லெக்யூம் (legume) என்று சொல்வது பருப்பு வகைத் தாவரங்களைக் குறிக்கிறது. Fabaceae அல்லது Leguminosae என்பது அவரை வகை தாவரக் குடும்பத்தின் தாவரவியல் பெயர். பருப்பு வகைத் தாவரங்கள் பல்வேறு வகைப்பட்டவை. பொதுவாக அவரை, துவரை, பயறு, மொச்சை, பட்டாணி வகைத் தாவரங்களின் விதை காய வைக்கப்பட்டு, மேல்தோல் நீக்கப்பட்ட பிறகு பருப்பு எனப்படுகிறது.

இந்தத் தாவரங்கள்தான் நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் நிரம்பியிருக்கும் நைட்ரஜனை (78 %) சேகரித்து, மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அவரை இனத் தாவரங்களின் வேர்க்கணுக்களில் ரைசோபியா பாக்டீரியா இருக்கிறது.

இது, அந்தத் தாவரங்களுடன் ஒன்றி வாழ்ந்தபடி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. இதனால் மண் வளம்மிக்கதாக மாறுகிறது. இதன் காரணமாகப் பயிற்சி சுழற்சி முறையில் வயலின் வளத்தை மேம்படுத்துவதற்குக் காலங்காலமாக இந்தப் பயிர்களைப் பயிரிடுவதை உழவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் இந்தச் செயல்பாட்டால் இந்தத் தாவரங்களின் விதைகள் புரதச் சத்து நிரம்பியவையாக உள்ளன.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
பருப்பு வகைத் தாவரங்களின் இலைகள் கூட்டிலைகள், சின்னச்சின்ன இரட்டை இலைகளாக, வரிசையாக இருக்கும். நீண்ட பச்சை நெற்று அல்லது உறையில் விதைகள் நிரம்பியதாக இவற்றின் காய் அமைந்திருக்கும். இந்தத் தாவரங்களின் விதைகள் காய வைக்கப்பட்டு மட்டுமல்லாமல், பச்சைக் காயாகவும் பயன்பாட்டில் உள்ளன. தாவர வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில், வகைகளில் அவரைக் குடும்பத் தாவரங்கள் சாப்பிடப்பட்டு வருகின்றன.

  • அவரை, பீன்ஸ், தட்டைப்பயற்றங்காய் (காராமணி) வகைத் தாவரங்கள் பச்சை காயாகவே சாப்பிடப்படுகின்றன. அவற்றின் விதைகள் மட்டுமில்லாமல், முற்றாத மேலுறையும் உண்ணப்படுகிறது.


  • அதேபோலக் காராமணி, பட்டாணி, மொச்சை போன்ற விதைகள் முதிர்ந்தவுடன் காய வைக்கப்படாமல் உண்ணப்படுகின்றன. இவற்றைச் சமைப்பது எளிது. அந்த நிலையில் வெளிப்புற உறை கடினப்பட்டிருப்பதால் சாப்பிடப்படுவதில்லை.


  • அதற்குப் பிறகு நன்கு முதிர்ந்த காய்கள் வெளிப்புற உறையுடன் காய வைக்கப்படுகின்றன. பிறகு வெளிப்புற உறை அகற்றப்பட்டு, காய்ந்த முழு விதைகள் உண்ணப்படுகின்றன. இவற்றை நீண்ட நேரம் வேக வேண்டும்.


  • காய வைக்கப்பட்ட முழு விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து முளைக்க விடப்படுகிறது. இப்படி முளைவிட்ட விதைகள் சத்து மிகுந்தவை. பொதுவாக ஓர் இரவு முழுக்க ஊற வைக்கப்பட்டு, தண்ணீரை வடித்துத் துணியில் கட்டியோ அல்லது பாத்திரத்திலோ வைக்கலாம். முளைகட்டிய பச்சைப் பயற்றை அப்படியே சாப்பிடலாம். முடியாதவற்றை எளிதாக வேக வைத்துவிடலாம்.


  • காய வைக்கப்பட்ட பயற்றை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இப்படிக் கிடைக்கும் கடலை மாவு பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சில மாவுகள் சூப்பில் சேர்க்கப்படுகின்றன.


இப்படிப் பச்சைக்காய், பச்சையான பயறு, முழு விதை, முளைகட்டிய பயறு, பருப்பு, மாவு எனப் பல வகைகளிலும் பருப்பு வகைத் தாவரங்கள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகள் காய வைக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டால் பருப்பு. இந்தப் பருப்பு வகைகள் நன்கு செரிமானம் ஆவதற்கும், வேக வைப்பதற்கும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சீரகம், மிளகு போன்ற தாளிப்புப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.

மருந்தாகும் பருப்பு
பண்டைய சித்த மருத்துவக் குறிப்புகளிலும், பருப்புகளைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. 'பயற்றங்காயை கறியாக உண்ணில் நன்மை உண்டாகும்' எனத் தேரையர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் பாடல்களிலும் பருப்பு வகைகளைப் பற்றி குறிப்புகள் உள்ளன. பருப்புகள் தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள்:

மசித்த பருப்புடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவது, மெலிந்த உடலைத் தேற்றுவதற்கான சிறந்த உணவு.

கர்ப்பக் காலத்தில் பனிக்குட நீர் அதிகரிப் பதற்குப் பருப்பில் உள்ள புரதம் அவசியம்.

பெரும்பாலான பயறு வகைகள் இனிப்புச் சுவையைக் கொண்டுள்ளன. இனிப்பு சுவை உடலுக்கு உடனடி ஆற்றலும் தசைகளுக்கு ஊட்டமும் தரக்கூடியது. குளிர்ச்சியுண்டாக்கும் செய்கையும் பயறு வகைகளுக்கு உண்டு. அதனால் குழந்தைகளுக்குப் பாலை மறக்கச் செய்வதற்கான நல்ல உணவாகப் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

புரதக்குறைவால் உண்டாகும் கால் வீக்கம் (pedal odema) வராமல் தடுக்க, பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தீப்புண்களுக்கு மருந்தாக சில பருப்பு வகைகள் பயன்படுகின்றன.

நன்றி : தி இந்து

Friday 9 September 2016

உற்பத்தியை அல்ல, உழவரை மையப்படுத்துங்கள்!

வானம் பொய்த்துவிட்ட நிலையில் காவிரியும் கைவிடுமோ என்றிருக்கிறது இன்றைய நிலை. பெரிய பதற்றம் வந்துவிடாது. தண்ணீர் வந்தால்தான் என்ன வந்துவிடப்போகிறது என்ற மனநிலையில் உழவர்கள். காவிரிப் படுகையில் விவசாயிகளின் சராசரி நிலவுடைமை இரண்டு ஏக்கர். ஆண்டுக்கு உங்களுக்கு என்ன மிச்சம் என்று கேட்டால், வைக்கோல்தான் மிச்சம் என்பார்கள். பரிகாசமல்ல, வேதனையை முந்திக்கொண்டு முன்னே வந்து நிற்கும் முறுவல். காவிரிக் கரையின் உணர்வு நுணுக்கமே அந்த உழவர்களின் மனத்தெம்பு.

கடனாளி உழவர்களை அதிகமாக உடைய ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும் அடுத்த இடத்தில் இருப்பது தமிழகம். தமிழகத்தில் 100-க்கு 80 விவசாயிகளுக்கு மேல் கடனாளிகள் என்றால், காவிரிப் படுகையில் இந்த விகிதம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. ஆண்டுக்கு ஆண்டு மொத்த நெல் உற்பத்தி கூடிக்கொண்டே போவதற்கு இலக்கு வைத்து எட்டிவிடுகிறோம். ஏக்கருக்கு, இந்த ஆண்டு இத்தனை மூட்டை விளைச்சல் என்றால், மறு ஆண்டு கண்டுமுதல் அதைவிடக் கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறோம். இருந்தாலும், உழவர்களின் கடன் சுமையும் மூன்று, நான்கு பங்கு கூடிவிடுவதுதான் எளிதில் புரிபடுவதாக இல்லை. நாட்டின் வளமும், உழவர்களின் நலிவும் ஒன்றாகவே சேர்ந்து நிகழ்வது ஒரு விந்தை.

சலித்துப்போன சாகுபடி
கிராமத்தை விட்டுக் குடிபெயர்ந்தவர்களின் மூன்றாவது தலைமுறை, நாட்டின் விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிடும் பொறுப்பில் இருக்கிறது. உற்பத்தியின் உயர்வு உழவர்களின் வளமாக உருமாறாமலாபோகும் என்று அனுமானித்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் நெல் விளையும் மொத்தப் பரப்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருப்பது மட்டும் கால் பங்குக்குக் கொஞ்சம்தான் குறைவு. மொத்த நெல் உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு கால் பங்குக்கு மேல். இந்த நெற்களஞ்சியத்தில் விவசாயத்தைச் சலித்துக்கொள்ளும் சூழலும், அதை வெறுத்துப் பேசும் நிலைமையும் சமுதாயம் மிகவும் கவலைப்பட வேண்டியவை. காவிரிப் படுகையில் கிராமத்தை விட முடிந்தவர்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். அவர்களை, ஏதோ பாழுங்கிணற்றிலிருந்து தப்பித்தவர்களைப் போல் கரையேறிவிட்டார்கள் என்று சொல்வது வழக்க மாகிவிட்டது. தென்னை விவசாயிகள் ஆதரவு விலை கோரிப் போராடுகிறார்கள். தங்களைப் பாதுகாக்க எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கக் கோருகிறார்கள். ஆலைக்கு விற்ற கரும்புக்கு நிலுவைத் தொகை கிடைக்காத அவதி. நெருக்கி ரூ.5,800 கோடி பயிர்க் கடன்களை அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. இருந்தாலும், எல்லாக் கடன்களையும் எல்லா விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்யும்படி கோர வேண்டிய நிலைமை. இடர் களையவும், துயர் துடைக்கவும் இலவசம், மானியம் என்று குறுவைக்கும் சம்பாவுக்கும் தொகுப்புத் திட்டங்கள். உற்பத்தி இலக்குக்காக வகுக்கும் திட்டங்கள், உழவர்களைக் கடனிலிருந்தும் மீட்குமா என்றும் பார்க்க வேண்டும்.

நமது புரிதலின் போதாமை
கிராமங்களையும் உழவர்களையும் நாம் புரிந்து கொள்வதில் ஒரு போதாமை உள்ளது. விவசாயம் வெறும் தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை. அக்கரைப் பச்சைக்கு ஆசைப்படுவதுபோல் சிலர் அதற்கு ஆசைப்படுவதற்கும், அதிலேயே இருப்பவர்கள் அதை வெறுப்பதற்கும் இதுவே காரணம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். சென்னை தீவுத்திடலில் நடந்த பொங்கல் வணிகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கிராமம் என்று எழுதிய பலகையோடு ஒரு இடம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முண்டாசு கட்டி, முழங்கால் அளவு வேட்டி உடுத்தி, குத்துக்கால் வைத்து ஒருவர் உட்கார்ந்திருந்தார். அருகே ஒரு மண் சட்டியைத் துழாவும் பாவனையில் அவரது மனைவி. வைக்கோலைக் கடித்துக்கொண்டு இரண்டு கொம்பு மாடுகள். கரும்புத் தோகையால் கூரை வேய்ந்த குடிசை. கிராமத்தைப் பற்றி சமுதாயத்துக்கு உருவாகியிருக்கும் இந்தப் பிம்பமும் ஒரு விமர்சனம். இப்படி ஒன்றைச் சித்தரித்துத் தன்னை அதற்கு வேறாகக் காட்டிக்கொள்கிறது சமுதாயம். சமுதாயத்தின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தைத் தானே தூக்கிச் சுமக்கும் சுமையாகச் சித்தரிக்கிறது. தன் குழந்தைகளைக் கிராமத்துக்கு அழைத்துவந்து அங்கே முணுக் முணுக்கென்று குடிசைகளில் எரியும் விளக்கைக் காட்ட வேண்டும் என்றார் ஒரு மருத்துவ நண்பர். இருளை விரட்டத் திராணி இல்லாத விளக்குகளும், இல்லாமையை விரட்ட இயலாத மக்களுமே கிராமம்! கிராம மேம்பாட்டுக்கான எத்தனையோ திட்டங்கள் இந்தப் பிம்பங்களால் உந்தப்பட்டவையாக இருக்கும்.

வரவும் செலவும்
திருவாரூருக்கும் கிழக்கே, காவிரியின் கடைமடையில் இருக்கும் ஒருவர் விவசாயத்துக்கான செலவைக் கூறினார். எருவடி, புழுதி உழவு, நாற்றங்கால் உழவு, அதற்குச் சேறு குழப்புவது, விதை கிரயம், விதை தெளி, நடவு வயல் உழவு, வயல் நிரவ, அண்டை போட ஆள் செலவு, நாற்றுப் பறி, நடவுச் சம்பளம், அடி உரம், மேல் உரம், பூச்சி மருந்து, இவற்றுக்குத் தெளிப்புக் கூலி, களை துவைப்பு, இயந்திர அறுவடை, தலையாரிச் சம்பளம், தூக்குக் கூலி, வண்டிச் சத்தம், பிறகு கொள்முதல் நிலைய உபரிச் செலவாக எழுத வேண்டிய செலவு - எல்லாமாக ஒரு ஏக்கருக்கு ரூ.17,000 செலவாகிறது என்றார். நல்ல கண்டுமுதல் என்றால், இரண்டு ஏக்கருக்கு 57 கிலோ கொண்ட 48 மூட்டை அவருக்குக் கிடைக்கலாம். பொருளாதார வல்லுநர்கள் அடுத்த ஆண்டுக்கான செலவைக் கழித்து, நிகரத்தைச் சொல்லுங்கள் என்பார்கள். அவ்வாறே அடுத்த ஆண்டுக்கான தரிசுக் கூலிச் செலவுபோக அவருக்கு மிஞ்சுவது 6,000-க்கும் குறைவு. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உளுந்தோ பயறோ நல்ல கண்டுமுதலானால் அதுதான் சொல்லிக்கொள்ளும்படியான வருமானமாக இருக்கும். இவ்வாண்டு இதுவரை வராத தண்ணீர் இனிமேல் வந்தாலும் நிலமில்லாத் தொழிலாளிக்கு முழுமையாக 50 நாட்கள் வேலை கிடைப்பது அரிது. அடுத்த ஆண்டுக்கான தரிசுக் கூலியைத் தனியாக வைத்துக்கொள்வதற்கு ஒருவராலும் முடிவதில்லை.

விவசாயச் செலவை ஆராய்ந்து, கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் இந்திய ஆணையம், இந்த ஆண்டுக்கு நெல் விலையைத் ‘தாராளம் காட்டி’ கிலோவுக்கு 60 பைசா உயர்த்தியுள்ளது. தீவிர சாகுபடி வந்தது. பிறகு, அதுவே இயந்திரமயமானது. இரண்டும் நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்தியது உண்மைதான். ஆனால், ஒரு வாழ்க்கைமுறையாக இருந்த விவசாயத்தின் தன்மையும் மாறியது. அந்த வாழ்க்கைமுறையின் மையக் கூறாக இருந்த விவசாயிகளின் தற்சார்பும் முற்றாக அழிந்தது. விதை, உரம், களைக்கொல்லி, பூச்சிமருந்து, வண்டிச் சத்தம் என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் ரொக்கம் கொடுக்க வேண்டும். இப்போது வண்டி ஏது? மாடு ஏது? எருக்குழிதான் ஏது? விளையும் நெல்லையும் விற்றுவிட்டு அரிசியாக வாங்குகிறார்கள். விவசாயத்துக்கான அரசின் திட்டங்களும் செலவினங்களுமே தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டன. பாசனம், வடிகால், மதகு போன்ற பொதுச் சொத்துகளை உருவாக்கும் செலவுக்குச் சமமாகத் தனி விவசாயிகளை உதிரி உதிரியாக ஊக்குவிக்கவும் நிதி வேண்டும்.

Image courtesy : Wikipedia
சுற்றுச்சூழலைக் கருதி, காவிரிப் படுகையைப் பாது காக்கப்பட்ட விவசாயப் பகுதியாக அறிவிக்கக் கோரு கிறார்கள். 1986 வாக்கில் காவிரிப் படுகை மேம்பாட்டுக்காகத் தனி ஆணையம் உருவாக்கப்போவதாகச் செய்திகள் வந்தன. மாவட்ட நிர்வாகங்களும் மாநிலத் துறைகளும் செய்துவரும் பணிகளைத் தானே செய்யும் இவ்வகை ஆணையம்பற்றி இன்றைக்காவது சிந்திக்கலாம். உற்பத்திக்கு இலக்கு வேண்டியதுதான் என்றாலும், உழ வரை மையப்படுத்தும் திட்டங்களும் வேண்டும். 1938-ல் விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்து ராஜாஜி ஒரு சட்டம் கொண்டுவந்தார். 1976-ம் ஆண்டிலும் ஒரு சட்டம் வந்தது. அப்போதுபோல் இப்போதும் கடன் சுமையி லேயே நெரிந்துபோகிறார்கள் விவசாயிகள். நடுத்தர விவசாயிகள்கூட நடவுக் காலத்தில் பண்டம் பாத்திரங்களை அடகு வைத்துப் பார்த்திருக்கிறேன். உழவர்கள் நலிய நலிய உற்பத்தி பெருகுவதில் என்ன மகிழ்ச்சி?

நன்றி தி இந்து

Wednesday 7 September 2016

A Land Identity Number solution for doubling incomes of farmers

Access to technology and capital determines the success of any enterprise, which includes farming. But technologies — improved seeds, irrigation, farm machinery, etc. — can to a great extent be acquired, if farmers have access to capital. And that is an area of major concern for most farmers: Since lack of collateral dents their ability to obtain loans from banks, they borrow at 24-72 per cent annual interest from informal credit markets. It, then, renders their enterprise unviable.
Image courtesy : staticflickr.com
Many farmers today are unable to provide collateral, as they don’t possess legal title of ownership even if they may have inherited the land from their forefathers. It’s even worse with tenants, who farm roughly a quarter of the country’s cultivated area. They, too, may have an unbroken history of tilling a particular piece of land, but often won’t have the documentation to prove this. There could be registers with village-level revenue officials that show title of ownership or cultivation rights, but getting access to these is the stuff of a million tales of woe for most farmers/tenants.
It raises a basic question: Why don’t farmers get their land properly registered? One reason, of course, the high stamp duties for registration, averaging 6-7 per cent and ranging from 4 per cent in Maharashtra to 14.5 per cent in Uttar Pradesh. This is where a policy initiative by Telangana promises to open up opportunities for millions of suffering farmers. The government of the newly created state, in June, opened a three-week window allowing farmers to register free-of-cost the land they may have bought in the past based on hand-written notes, locally known as ‘sada bainama’. These informal sale documents confer no real legal ownership entitling their holders to seasonal agricultural loans from banks or government compensation against crop losses. The Telangana government’s announcement led to over 1.1 million applications from farmers flocking to get their plain paper-based land purchase transactions formally registered.
The Telangana example is definitely worthy of emulation by other states. But the objective should not be to just provide legal titles to land. Rather, it must aim at complete digitisation of land records. Each land parcel registered should be located through a GIS marker, seeded with the owner’s Aadhaar details and fixed on a digital map. The process would culminate in assigning a unique identity — call it a Land Identity Number or LIN — for each such parcel. From there, the next step is to integrate LIN to JAM (i.e. the farmer’s Jan Dhan bank account, her Aadhaar unique identification and Mobile numbers).
A farmer’s LIN can further be linked to a data server that would have details of which crop she is cultivating on the particular plot. The farmer can herself provide that information to the server by simply sending an SMS. Geography-specific weather aberrations can, then, be monitored and crop production estimates revised in real time. With a planned grid of weather stations, it is possible to also implement a foolproof crop insurance scheme. The LIN enables each farmer to be tagged to the nearest weather station. If the station indicates a bad weather event (drought or excess rain), there could be a system-generated signal to the insurance company to process the agreed compensation to the farmer’s Aadhaar-seeded bank account within 24-48 hours.
Crop loans can similarly be processed smoothly with minimal formalities, once banks have the LIN and JAM details of all farmers. With the LIN-JAM confluence making available the details of the plot of land and credit history of each farmer, no further document is required for processing such loans. Eventually, there could even be credit information bureaus providing credit rankings for individual farmers against their LINs. A model more or less on these lines is, in fact, currently being piloted in both Telangana and Andhra Pradesh. Hopefully, it should yield something bigger that is also replicable on a national scale.
LIN can, moreover, provide a potential solution to the tricky subject of land tenancy in India. Land, we know, is a sensitive and emotional subject. With LIN and digitisation of land records, however, owners can be assured that their ownership rights are protected. Matching the Aadhaar details of the landowner and tenant with LIN makes it possible to also create a record of tenancy. That, in turn, would help the government to crack the puzzle associated with moving from the existing system of non-targeted agricultural input subsidies to making direct cash transfers. Right now, in the absence of identification of the real tiller of the land, there is the danger of such transfers being made to unintended recipients. All this will change once tenancies are legalised through simultaneous protection of landowners’ rights.
LIN will also enable land aggregation, ushering in economies of scale in agriculture. With secure titles and replacement of physical boundaries by digital ones, there would be incentives for pooling and creation of larger land parcels, on which advanced farm machinery technologies can be deployed. Use of planters and harvesters can pare cultivation costs by 15-30 per cent, just as laser leveling machines could help boost yields by 10-15 per cent and reduce water requirement by 20-30 per cent. Operating these is not really possible today on small, fragmented plots. The overall increase of up to 50 per cent in incomes of farmers — from productivity gains and reduced costs of cultivation, not to speak of improved access to capital, crop insurance and government transfers — would mark a significant step towards realising the Prime Minister’s goal of “doubling farm incomes by 2022”. Aggregation of output from economies of scale will also help agribusiness companies to directly source produce from farmers.
The LIN solution can be a transformative initiative that leads to ease of doing business for all stakeholders in agriculture — farmers, traders/processors, bankers, insurance companies and the government itself. The costs of putting up the infrastructure for digitisation on such a scale is negligible compared to the gains to be made in the short and medium term. For India’s IT giants, too, it serves as a challenge and opportunity to make a difference — in a field where they have hardly worked.
courtesy : The Indian Express



Monday 5 September 2016

மைதா.....உணவல்ல... விஷம்!

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல  ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது.  இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தெரிந்து  கொண்டுதான் மைதாவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. 

Image & Article courtesy : Dinakaran
நீரிழிவு சிறப்பு மருத்துவரான  பரணீதரனிடம் மைதா உணவுகள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் சொல்வது ஏன் என்று கேட்டோம்… ‘‘மைதா  மாவு நீரிழிவைத் தூண்டும் அபாயம் கொண்டது என்பதுதான் மருத்துவர்களின் எச்சரிக்கைக்கான முதல் காரணம். இதைக்  கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

எல்லா உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என அடிப்படை யான மூன்று விஷயங்கள்  இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு குளுக்கோஸ் வெளியாகிறது, அதில் எந்த அளவு சக்தியாக  மாற்றப்படுகிறது என்பதை க்ளைசெமிக் இன்டெக்ஸ் என்று அளக்கிறோம். இந்த அளவு மைதாவில் மிகவும் அதிகமாக  இருக்கிறது. மைதா உணவினால் கிடைக்கும் அதீத குளுக்கோஸ் அளவை சமன்படுத்தும் அளவு உடலுக்கு இன்சுலின்  உற்பத்தித்திறன் இருக்காது.

 ஆரம்பகட்டத்தில் தன் சக்திக்கு மீறி அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கணையம் போராடினாலும்,  நாளடைவில் சோர்ந்து போய்விடும். Insulin resistance என்கிற இந்த நிலை ஏற்படுவது கிட்டத்தட்ட  கணையம் பழுதாகிவிட்ட நிலைக்குச் சமம்தான். மைதா உணவுகளை தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு நீரிழிவு  ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்’’ என்கிற பரணீதரன், மைதாவினால் கணையத்தின் பீட்டா செல்கள்  அழிக்கப்படும் விதம் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல  வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும்  இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன் என்கிற  இந்த செயலி்னால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை  அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ்  செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவு நோய்.

இத்துடன் மைதா மாவில் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். முக்கியமாக, மைதா மாவில் அலொக்ஸான் என்கிற  ரசாயனம் சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும்,  சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள்  ஏற்படும். அதேபோல பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள்.  இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது  என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்’’ என்கிறார்.

ஒரு மருத்துவராக மைதாவின் சுவைக்கு மாற்றாக என்ன உணவுகளைப் பரிந்துரைப்பீர்கள் என்று கேட்டதும், ‘நாம்  சுவையைத் தேடித்தான் போகிறோம். அது என்ன உணவுப்பொருள், எப்படி தயாரிக்கிறார்கள், அதனால் கெடுதல் வருமா  போன்ற விஷயங்களை கவனிப்பதில்லை’ என்கிறார்.

‘‘இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்க வேண்டுமானால், சில  கட்டுப்பாடுகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும். பிற்காலத்தில் அவதிப்படுவதை விட முன்னரே எச்சரிக்கையாக  இருப்பது நல்லது.மைதா பிரெட்டுக்குப் பதிலாக கோதுமை பிரெட் சாப்பிடலாம். பீட்சாவுக்குப் பதிலாகக் காய்கறிகள்  நிறைந்த சாண்ட்விச் சாப்பிடலாம். சுண்டல், வேர்க்கடலை என நம்முடைய இயற்கையான, பாரம்பரிய உணவுகள்  எக்கச்சக்கமாக இருக்கின்றன. இவை எப்போதும் பாதுகாப்பானவை.

மேற்கத்திய நாடுகள் அறிமுகப்படுத்திய மைதா உணவுகளின் சுவைக்கும் மேலாக நம் பாரம்பரிய உணவுகளை  சுவையாக செய்து சாப்பிட முடியும். கொஞ்சம் முயற்சி எடுத்து நம் பாரம்பரிய உணவுகளை வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிட முயற்சிக்க வேண்டும்.ஏற்கெனவே, அரிசி உணவின் பயன்பாடு நம் நாட்டில் அதிகம்  இருக்கிறது. இதனுடன் மைதா உணவுகளும் அதிகம் சாப்பிடும்போது ரிஸ்க் இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதில் நம்  உடல் உழைப்புக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாமலேயே High calorie diet  எடுத்துக்கொள்கிற தவறான பழக்கத்தாலும் நீரிழிவு ஏற்படுகிறது.

அதனால், மைதா உணவுகளை விட்டுவிடுவதே நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில் குறைந்த அளவிலேயே எடுத்துக்  கொள்ளுங்கள். மைதா உணவுகளை சாப்பிட்டுவிட்டால் அதற்கேற்ற நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என கொஞ்சம் அந்த  எனர்ஜியை செலவு செய்யும் வழிகளைப் பின்பற்றிவிடுங்கள்’’ என்கிறார் டாக்டர் பரணீதரன்.

ரசாயன நச்சுக் குப்பை!


மைதாவில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் தன்மை குறித்து மேலும் விளக்கமாகக் கூறுகிறார் கரிமவேதியியல் பேராசிரியரான விஜயகுமார்.‘‘மைதாவில் சேர்க்கப்படும் பென்சாயி்ல் பெராக்சைடின் முக்கியப் பயன்பாடு அதை  வெண்மையாக்குவதுதான். காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை  பளபளப்பாக்குவதற்கும் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது ரத்தத்தில் Free radicals என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில்  பாதிப்பு ஏற்படும். அலொக்ஸான் எனும் ரசாயனத்தை எலிக்குக் கொடுத்து பரிசோதித்தபோது இன்சுலின் உற்பத்திக்கு  ஆதாரமாக இருக்கக் கூடிய பீட்டா செல்களை நேரடியாகத் தாக்கி நீரிழிவை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.

இது அதிக அளவில் உடலில் தங்கும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது ஆராய்ச்சியில்  நிரூபணமாகி உள்ளது.ஒரு தானியத்தை இயற்கையான முறையில் வெண்மைப்படுத்தும் வேலையை சூரிய  ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் செய்கின்றன. ஆனால், பல்லாயிரம் டன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால்  அப்படி செய்வது சாத்தியமற்றது என்பதாலேயே இந்த ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள்’’ என்கிறார் விஜயகுமார்.

நோயைத் தவிர ஒன்றுமே இல்லை!


மைதாவால் நமக்கு என்னதான் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினால், ‘நோயைத் தவிர வேறொன்றும் இல்லை’  என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுப்ரியா... ‘‘கோதுமையின் தவிட்டை நீக்கிவிட்டால் கிடைக்கும் மைதா மாவில்  மாவுச்சத்தைத் தவிர நமக்கு கிடைக்கக்கூடிய நன்மை எதுவுமில்லை. பீட்சா, பர்கர், புரோட்டா, சோலா பூரி, பாஸ்தா,  நாண், பிஸ்கெட், கேக், சமோசா, வட இந்தியர் உட்கொள்ளும் கச்சோரி, ருமாலி ரொட்டி என மைதாவில் தயார்  செய்யப்படும் உணவுப்பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாவுச்சத்து அதிக அளவில் உடலில் தங்கி விடும்.  தேவைக்கு அதிகமான மாவுச்சத்து கெட்ட கொழுப்பாக மாறிவிடும்.

மைதா உணவுகள் பெரும்பாலானவற்றில் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகவும் கொழுப்பு  அதிகரித்து பருமன் ஏற்படும். எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைதாவால் தயாரிக்கப்படும் எந்த  உணவுப் பொருட்களையும் உட்கொள்ளக் கூடாது.மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக்  அல்சர், பித்தப்பைக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு  மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது. மைதாவில் இருக்கும் கெட்ட கொழுப்பு உடலில் அதிகம் தங்கும் போது  ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. நார்ச்சத்து அறவே நீக்கப்பட்ட மைதா  உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளும்போது நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் மலச்சிக்கல்,  ஆசனவாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோய் சிவப்பு இறைச்சி மற்றும் மைதா  சாப்பிடுகிறவர்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது’’ என்கிறார் சுப்ரியா.

நன்றி : தினகரன்