Tuesday 2 February 2016

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும், சேமிக்கும் முறை

மாட்டுச் சிறுநீரை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். எளிதாக சேகரிக்கும் முறையைச் சொல்லுங்கள்?

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாய பயிற்சியாளர் ராமண்ணா பதில் சொல்கிறார்.

‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. ‘பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாகப் பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு
விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாகப் பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது’ என்று ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வார். 

பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான நுட்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம். சிறுநீரைச் சேகரிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். 

வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் கூடுதலாக சிறுநீர் கொடுத்து வருகின்றன.

Courtesy : Pasumai Vikatan

No comments:

Post a Comment